Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளை முதல் ரயில்களில் மக்களுக்கு அனுமதியில்லை - ரயில்வே துறை அறிவிப்பு

Webdunia
புதன், 5 மே 2021 (16:09 IST)
கொரோனா இரண்டாம் கட்ட அலை உலகம் முழுவதும் பரவி வருகிறது. இதில் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பும் அதிகரித்துவருகிறது.

இந்நிலையில், மக்களைக் கொரொனா தொற்றிலிருந்து பாதுகாக்க அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

அந்த வகையில் தேசியர் பேரிடர்  மேலாண்மைச் சட்டம் 2005ன் கீழ்  ஏற்கனவே ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் நாளை முதல்  தமிழக  அரசு புதிய கொரோனா கட்டுப்பாடுகள் விதித்துள்ள நிலையில், இன்று புறநகர் ரயில்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

அதில்,மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்டுள்ள மத்திய மற்றும் மாநில் அரசு ஊழியர்கள் மட்டுமே ரயில்களில் செல்ல அனுமதி உண்டு எனவும், காவல்துறை, மாநகராட்சி, ஊழியர்கள், சுகாதாரப்பணியார்கள் போன்ற கொரொனா முனகளப் பணியாளர்கள் ரயில்களில் செல்ல அனுமதியுண்டு எனவும் தெரிவிக்கப்படுள்ளது.  புதிய கட்டுப்பாடுகள் நாளை முதல் வருவதால் 20 ஆம் தேதி வரை மக்களுக்கு அனுமதியில்லை எனக் கூறப்பட்டுள்ளது.

 மேலும், தனியர் மற்றும் அரசுப்பேருந்துகளில் செல்லும் பணிகள் எண்ணிக்கை 50% மட்டுமே இருக்கவேண்டும் . அதேபோல் பயணிகள் கட்டாயம முககவசம் அணிந்து வரவேண்டும் எனப் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எத்தனை முறை நீக்கினாலும் மீண்டும் மீண்டும் வரும் பெண்களின் அந்தரங்க வீடியோ.. சென்னை ஐகோர்ட் வேதனை..!

டிகிரி இருந்தா போதும்.. கூட்டுறவு சங்கங்களில் 2000 உதவியாளர் வேலை! - உடனே அப்ளை பண்ணுங்க!

3வது நாளாக இன்றும் உயர்ந்தது தங்கம் விலை.. ஒரு சவரன் ரூ.75000ஐ தாண்டியதால் அதிர்ச்சி..!

பறிபோன ஐ.டி வேலை.. கழுத்தை நெறித்த கடன்! கொள்ளையனாக மாறிய ஐ.டி ஊழியர்!

டிரம்ப் மிரட்டலால் எந்த பிரச்சனையும் இல்லை.. மீண்டும் உயரும் பங்குச்சந்தை..

அடுத்த கட்டுரையில்
Show comments