Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிறப்பு பேருந்துக்கு 50000 பேருக்கு மேல் முன்பதிவு: கலகலக்கும் தீபாவளி!

Webdunia
திங்கள், 14 அக்டோபர் 2019 (20:48 IST)
தீபாவளிக்கு சொந்த ஊருக்கு செல்ல சிறப்பு பேருந்துகளில் முன்பதிவு செய்தவர்கள் 50000 பேருக்கு மேல் என தமிழக போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.

வெளியூர்களில் வேலை செய்பவர்கள் சொந்த ஊருக்கு செல்வதற்காக தமிழக அரசு சிறப்பு பேருந்துகளை ஏற்பாடு செய்வது வழக்கம். இந்த முறையும் அதுபோல ஏற்பாடு செய்துள்ள சிறப்பு பேருந்துகளில் பயணிக்க 51 ஆயிரத்து 208 பேர் முன்பதிவு செய்துள்ளனர்.

அதில் சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்கு செல்ல 33 ஆயிரத்து 870 பேரும், மற்ற ஊர்களில் இருந்து பிற பகுதிகளுக்கு செல்ல 17 ஆயிரத்து 338 பேரும் பதிவு செய்துள்ளனர். இதன்மூலம் தமிழக அரசுக்கு சுமார் இரண்டரை கோடி வருவாய் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.

அரசு பேருந்துகளில் மட்டுமல்லாமல் ரயில்கள், தனியார் பேருந்துகளிலும் டிக்கெட் புக் செய்தவர்களையும் கணக்கிட்டால் சுமார் ஒரு லட்சம் பேருக்கு மேல் தீபாவளிக்கு ஊர்களுக்கு செல்ல முன்பதிவு செய்திருப்பதாக தெரிகிறது. முன்பதிவு அல்லாமல் உடனடி டிக்கெட் எடுத்து செல்பவர்கள் இந்த அளவீடுகளில் சேர்க்கப்படவில்லை.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகாராஷ்டிரா சட்டமன்ற எம்.எல்.ஏக்கள் அடிதடி சண்டை.. சட்டமன்றத்திற்கு குண்டர்கள் வந்தார்களா?

கோபாலபுரம் இல்லத்தில் மு.க.முத்து உடல்; துணை முதல்வர் உதயநிதி அஞ்சலி..!

வங்கதேசத்தவர்கள் என கூறி முகாமில் அடைக்கப்பட்ட 19 பேர். சொந்த நாட்டிலேயே அகதிகளா?

15 வயது சிறுமியை பெட்ரோல் ஊற்றி எரித்த 3 மர்ம நபர்கள்.. காதல் விவகாரமா?

ஈபிஎஸ் அவராக பேசவில்லை, அவரை யாரோ பேச வைக்கிறார்கள்: திருமாவளவன்

அடுத்த கட்டுரையில்
Show comments