Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குப்பைகளை தரம் பிரிக்காத மக்களுக்கு அபராதம்!? – திடக்கழிவு மேலாண்மை குழு!

Webdunia
வியாழன், 12 டிசம்பர் 2019 (13:20 IST)
குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து கொடுக்காத மக்களுக்கு அபராதம் விதிக்கப்படலாம் என திடக்கழிவு மேலாண்மை குழு தலைவர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தின் மாநகரம் மற்றும் நகர பகுதிகளில் நாளுக்கு நாள் திடக்கழிவுகள் அதிகரித்து கொண்டே வருகின்றன. அவற்றை அகற்றுவதற்கும், மறுசுழற்சி செய்வதற்கும் அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பை ஆகியவற்றை தனித்தனியாக் கொட்ட அனைத்து பகுதிகளிலும் இரண்டு குப்பை தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் மக்கள் குப்பைகளை அவ்வாறாக தரம் பிரித்து கொட்டுவதில்லை என்பதால் அனைத்து குப்பைகளும் ஒன்றாக கலந்தே கிடக்கின்றன.

இந்நிலையில் திடக்கழிவு சுத்திகரிப்பு குறித்த மாநில கண்காணிப்பு குழு கூட்டம் சென்னையில் நடைபெற்றது. அதில் பேசிய திடக்கழிவு மேலாண்மை குழு தலைவர் ஜோதிமணி குப்பைகளை தரம் பிரித்து தராதவர்களுக்கு 5 ஆயிரம் வரை அபராதம் விதிக்க சட்டத்தில் இடம் உள்ளதாகவும், பொதுமக்கள் குப்பைகளை தரம் பிரித்து கொடுத்தாலே திடக்கழிவு மேலாண்மையில் பிரச்சினைகள் ஏற்படாது எனவும் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விருப்பத்துடன் திருமணத்தை மீறிய உறவு வைத்துக் கொள்வது குற்றமல்ல: உயர்நீதிமன்றம்

அரசு பள்ளிகளில் இனி காலை உணவில் உப்புமா இல்லை: அமைச்சர் கீதா ஜீவன்

வக்பு சட்டத்தில் மட்டும் ஏன் புதிய நடைமுறை? சுப்ரீம் கோர்ட் கேள்வி

சென்னையில் 10 ஆண்டுகளுக்கு பின் ஏப்ரலில் பெய்த மழையின் சாதனை.. முழு தகவல்கள்..!

245 சதவீதம் வரி.. என்ன பண்ணப் போறீங்க? - சீனாவை சீண்டிய அமெரிக்கா!

அடுத்த கட்டுரையில்
Show comments