Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குப்பைகளை தரம் பிரிக்காத மக்களுக்கு அபராதம்!? – திடக்கழிவு மேலாண்மை குழு!

Webdunia
வியாழன், 12 டிசம்பர் 2019 (13:20 IST)
குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து கொடுக்காத மக்களுக்கு அபராதம் விதிக்கப்படலாம் என திடக்கழிவு மேலாண்மை குழு தலைவர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தின் மாநகரம் மற்றும் நகர பகுதிகளில் நாளுக்கு நாள் திடக்கழிவுகள் அதிகரித்து கொண்டே வருகின்றன. அவற்றை அகற்றுவதற்கும், மறுசுழற்சி செய்வதற்கும் அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பை ஆகியவற்றை தனித்தனியாக் கொட்ட அனைத்து பகுதிகளிலும் இரண்டு குப்பை தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் மக்கள் குப்பைகளை அவ்வாறாக தரம் பிரித்து கொட்டுவதில்லை என்பதால் அனைத்து குப்பைகளும் ஒன்றாக கலந்தே கிடக்கின்றன.

இந்நிலையில் திடக்கழிவு சுத்திகரிப்பு குறித்த மாநில கண்காணிப்பு குழு கூட்டம் சென்னையில் நடைபெற்றது. அதில் பேசிய திடக்கழிவு மேலாண்மை குழு தலைவர் ஜோதிமணி குப்பைகளை தரம் பிரித்து தராதவர்களுக்கு 5 ஆயிரம் வரை அபராதம் விதிக்க சட்டத்தில் இடம் உள்ளதாகவும், பொதுமக்கள் குப்பைகளை தரம் பிரித்து கொடுத்தாலே திடக்கழிவு மேலாண்மையில் பிரச்சினைகள் ஏற்படாது எனவும் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கண்ணிமைக்கும் பொழுதில் காணாமல் போன உயிர்கள்! உத்தரகாண்ட் மேகவெடிப்பு அதிர்ச்சி வீடியோ!

உத்தரகாண்ட் நிலச்சரிவு.. வயநாடை விட மோசமா? ஒரு கிராமத்தையே காணவில்லை..

தவணை கட்டாததால் ஜேசிபி இயந்திரம் ஏலம்.. வங்கியில் புகுந்து ஊழியர்களை அடித்து நொறுக்கிய கும்பல்..!

விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்.. தேதியை அறிவித்த ஈபிஎஸ்..!

கலைஞர் பல்கலைக்கழகம் மசோதா.. ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்த கவர்னர் ஆர்.என்.ரவி..!

அடுத்த கட்டுரையில்
Show comments