Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹெல்மெட் அணியாததற்கு காரணம் வெயில்தான் – தமிழக அரசு பதில் !

Webdunia
செவ்வாய், 4 ஜூன் 2019 (14:13 IST)
ஹெல்மெட் சட்டத்தை அமல்படுத்தக்கோரி தொடரப்பட்ட வழக்கில் வெயில் காரணமாக மக்கள் ஹெல்மெட் அணிவதில்லை என தமிழக அரசுக் கூறியுள்ளது.

கடந்த 2007ஆம் ஆண்டு முதல் இரு சக்கரவாகனங்களில் செல்வோர் கண்டிப்பாக தலைக்கவசம் அணியவேண்டும் என்றும் கார் ஓட்டுபவர்கள் சீட் பெல்ட் அணியவேண்டும் எனவும் தமிழக அரசு ஆணை பிறப்பித்தது. ஆனால் அந்த் ஆணை பெயரளவிலே உள்ளது என்றும் அதனை முழுமையாக அமல்படுத்த வேண்டும் எனவும் பொதுநல வழக்குத் தொடரப்பட்டது.

இந்த் வழக்கின் விசாரணையின் போது தமிழகத்தில் ஹெல்மேட் அணிவதைக் கட்டாயமாக்க தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த தமிழக அரசு ‘ ஹெல்மெட் அணிவது குறித்து நிறைய விழிப்புணர்வு பிரச்சாரங்கள் செய்யப்பட்டு வருகின்றன. ஆனால் இப்போது  வெயில் அதிகமாக இருப்பதால் இருசக்கர வாகன ஒட்டிகள் ஹெல்மெட் அணிவதில்லை ’ எனப் பதிலளித்துள்ளது.

இந்த பதிலால் திருப்தியடையாத நீதிபதிகள் கட்டாய ஹெல்மேட் சட்டத்தை அமல்படுத்தக் காவல் துறையினர் எடுத்த நடவடிக்கை குறித்து நாளை மறுநாள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமெனக் கூறியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments