Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தொடர் விடுமுறை எதிரொலி: மெரீனாவில் குவிந்த பொதுமக்கள்

தொடர் விடுமுறை எதிரொலி: மெரீனாவில் குவிந்த பொதுமக்கள்
, வெள்ளி, 5 நவம்பர் 2021 (18:50 IST)
இந்த ஆண்டு தீபாவளி விடுமுறையாக 4 நாட்கள் தொடர் விடுமுறை ஆனதை அடுத்து நேற்று தீபாவளி கொண்டாடிய பொதுமக்கள் இன்று சென்னை மெரினாவில் குவிந்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
4 நாட்கள் தொடர் விடுமுறை காரணமாக நேற்று சென்னை மெரினாவில் கூட்டம் அதிகமாக இருந்தது. இன்று மழை இல்லாத காரணத்தினால் சென்னை மெரினாவில் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது 
 
பொதுமக்கள் தனிமனித இடைவெளியின்றி மெரினாவில் குவிந்து உள்ளனர் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் சனி ஞாயிறு என்பதால் அடுத்த இரண்டு நாட்களும் சென்னை மெரினாவில் கூட்டம் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது 
 
சென்னையில் இருந்து ஏராளமானோர் வெளியூருக்கு சொந்த ஊருக்கு சென்ற போதிலும் சென்னை மெரினாவில் இவ்வளவு பெரிய கூட்டம் கூடி உள்ளது பெரும் ஆச்சரியத்தை அளித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கொரோனா செய்தி சேகரிக்க சென்றவர் மரணப்படுக்கையில்: அதிர்ச்சியில் சீன மக்கள்