Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மக்களுக்கு 10 ஹெலிகாப்டர்கள் மூலம் உணவு வழங்கப்பட்டு வருகிறது- தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா

Webdunia
புதன், 20 டிசம்பர் 2023 (12:58 IST)
தென் மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக ஏராளமான சேதம் ஏற்பட்டுள்ள  நிலையில் மீட்பு படையினர் அவர்களை மீட்டு வருகிறது. தமிழக அரசு மக்களுக்குத் தேவையான   மீட்பு மற்றும் நிவாரண உதவிகள் துரிதமாகச் செய்து வருகிறது.

இந்த நிலையில், மீட்பு மற்றும் நிவாரண பணிகளை  விரைவுப்படுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதாக  தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா தெரிவித்துள்ளார்.

தற்போது செய்தியாளர் சந்திப்பின்போது அவர் கூறியுள்ளதாவது:

நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுவர்களுடன் முதல்வர் நேரடியாகப் பேசி பாதிப்புகளை கேட்டறிந்தார்.

ஸ்ரீவைகுண்டத்திலேயே உணவு சமைத்து பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தென்மாவட்டங்களில் தண்ணீர் தேங்கியுள்ள பகுதிகளில் விரைவாக மின் விநியோகம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்துள்ளார்.

மேலும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 10 ஹெலிகாப்டர்கள் மூலம் உணவு வழங்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருமணத்திற்கு என்னை ஏன் அழைக்கவில்லை.. துப்பாக்கியால் சுட்ட பக்கத்து வீட்டுக்காரர்..!

மறுமணம் செய்த பெண் ஊழியருக்கு மகப்பேறு விடுப்பு கிடையாதா? ஐகோர்ட் கண்டனம்..!

தமிழகத்தில் இன்றும் நாளையும் கனமழை.. அதேசமயம் வெயிலும் கொளுத்தும்: வானிலை அறிவிப்பு..!

தெலுங்கானாவில் இருந்து குமரிக்கு திருவண்ணாமலை வழியாக சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு..!

வட இந்தியர்கள் பன்னிக்குட்டி போல் குழந்தைகள் பெற்றுள்ளனர்.. அமைச்சர் கருத்துக்கு அண்ணாமலை கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments