Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செல்ஃபி எடுத்தால் ரூ. 2000 அபராதம் - பிடியை இறுக்கிய தெற்கு ரயில்வே!

Webdunia
வியாழன், 21 ஏப்ரல் 2022 (10:25 IST)
ரயில் தண்டவாளங்களில் நின்று செல்ஃபி எடுத்தால் ரூபாய் 2000 அபராதம் விதிக்கப்படும் என்று ரயில்வே துறை எச்சரித்துள்ளது.

 
இது குறித்து தெற்கு ரயில்வே விரிவாக தெரிவித்துள்ளதாவது, ஓடும் ரயில்களில் படிக்கட்டில் தொங்கிக் கொண்டு பயணம் செய்பவர்கள், தண்டவாளத்தில் நின்று கொண்டு செல்ஃபி எடுப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். 
 
ரயில் படிக்கட்டில் தொங்கிக் கொண்டு பயணம் செய்தால், ரூ.500 அபராதம் அல்லது 3 மாதங்கள் சிறைத் தண்டனை, ரயில் தண்டவாளங்களில் நின்று கொண்டு செல்ஃபி எடுத்தால் ரூ.2,000 அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
சமீபத்தில் இன்ஸ்டாகிராம் வீடியோவுக்காக கெத்து காட்டிய மூன்று இளைஞர்கள் ரயில் மோதி துண்டு துண்டாக சிதறி சம்பவம் செங்கல்பட்டு அருகே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கடந்த 2021-22 ஆம் ஆண்டு ரயில் தண்டவாளங்களை அத்துமீறி கடந்து சென்றது தொடர்பாக 1,411 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 200 பேர் ரயிலில் அடிபட்டு உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments