Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெரியார், அம்பேத்கர் படங்கள் அவமதிப்பு! – கிருஷ்ணகிரியில் பரபரப்பு!

Webdunia
செவ்வாய், 13 ஏப்ரல் 2021 (11:43 IST)
கிருஷ்ணகிரியில் ஒட்டப்பட்ட பெரியார், அம்பேத்கர் படங்கள் மீது மர்மநபர்கள் அவமதிப்பு செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏப்ரல் 14ம் தேதியான நாளை சட்டமேதை அம்பேத்கரின் பிறந்தநாள் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. அம்பேத்கர் பிறந்தநாளுக்கு மத்திய அரசு அலுவலகங்களுக்கு விடுப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அம்பேத்கர் பிறந்தநாளை கொண்டாடும் விதமாக கிருஷ்ணகிரியில் சுவர் ஒன்றில் பெரியார் மற்றும் அம்பேத்கரின் படங்கள் வரையப்பட்டுள்ளன.

இந்நிலையில் அந்த படங்கள் மீது சாணத்தை வீசி மர்ம நபர்கள் அவமரியாதை செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த செயலை செய்தவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments