கையக் குடுங்க.. கட்டிப்பிடிங்க! துரை வைகோ - மல்லை சத்யாவை சமாதானம் செய்த வைகோ!

Prasanth Karthick
ஞாயிறு, 20 ஏப்ரல் 2025 (17:59 IST)

ம.தி.மு.கவில் துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா - முதன்மை செயலாளர் துரை வைகோ இடையேயான முரண்பாடு முடிவுக்கு வந்துள்ளது.

 

மல்லை சத்யா ஆதரவாளர்கள் கட்சிக்கு எதிராக செயல்படுவதாக பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்த கட்சியின் முதன்மை செயலாளர் துரை வைகோ, கட்சியிலிருந்து தான் விலகுவதாக ராஜினாமா கடிதம் அளித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து மதிமுக நிர்வாகிகள் குழுக் கூட்டம் கூடப்பட்டது.

 

அதில் துரை வைகோ பதவி விலகக்கூடாது என பலரும் வேண்டுகோள் விடுத்த நிலையில், துணைப் பொதுச் செயலாளரான மல்லை சத்யா, தான் கட்சிக்கு விரோதமாக நடந்துக் கொள்ளவில்லை என்றும், தனது செயல்பாடுகள் வருந்தும்படி செய்திருந்தால் மன்னித்துக் கொள்ளும்படியும் துரை வைகோவிடம் கேட்டுள்ளார்.

 

அதை தொடர்ந்து செய்தியாளர்கள் முன்பு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, இருவரையும் சமாதானம் செய்து வைத்தார். இருவரது கைகளையும் அவர் இணைத்து வைத்தார். பின்னர் இருவரும் கட்டிப்பிடித்து பரஸ்பரம் சமாதானத்தை தெரிவித்துக் கொண்டனர்.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஏமாந்து போயிடாதீங்க.. திமுக பக்கம் நில்லுங்க!.. விஜயை தாக்கிய சத்யராஜ்!...

மகளிர் உரிமை தொகை உயரும்.. மு.க.ஸ்டாலின் அறிவிப்பு...

புஸ்ஸி ஆனந்த் சரியில்ல!.. எனக்கே இந்த நிலையா?!.. தவெகவில் மோதல்!...

சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகளில் பெரும் மாற்றம்: 2026 முதல் அமல்!

காலையில் உயர்ந்த தங்கம் மாலையில் மீண்டும் உயர்வு.. ஒரு லட்சத்தை தொட இன்னும் 1040 ரூபாய் தான்..

அடுத்த கட்டுரையில்
Show comments