Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கையக் குடுங்க.. கட்டிப்பிடிங்க! துரை வைகோ - மல்லை சத்யாவை சமாதானம் செய்த வைகோ!

Prasanth Karthick
ஞாயிறு, 20 ஏப்ரல் 2025 (17:59 IST)

ம.தி.மு.கவில் துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா - முதன்மை செயலாளர் துரை வைகோ இடையேயான முரண்பாடு முடிவுக்கு வந்துள்ளது.

 

மல்லை சத்யா ஆதரவாளர்கள் கட்சிக்கு எதிராக செயல்படுவதாக பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்த கட்சியின் முதன்மை செயலாளர் துரை வைகோ, கட்சியிலிருந்து தான் விலகுவதாக ராஜினாமா கடிதம் அளித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து மதிமுக நிர்வாகிகள் குழுக் கூட்டம் கூடப்பட்டது.

 

அதில் துரை வைகோ பதவி விலகக்கூடாது என பலரும் வேண்டுகோள் விடுத்த நிலையில், துணைப் பொதுச் செயலாளரான மல்லை சத்யா, தான் கட்சிக்கு விரோதமாக நடந்துக் கொள்ளவில்லை என்றும், தனது செயல்பாடுகள் வருந்தும்படி செய்திருந்தால் மன்னித்துக் கொள்ளும்படியும் துரை வைகோவிடம் கேட்டுள்ளார்.

 

அதை தொடர்ந்து செய்தியாளர்கள் முன்பு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, இருவரையும் சமாதானம் செய்து வைத்தார். இருவரது கைகளையும் அவர் இணைத்து வைத்தார். பின்னர் இருவரும் கட்டிப்பிடித்து பரஸ்பரம் சமாதானத்தை தெரிவித்துக் கொண்டனர்.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று 8 மாவட்டங்களுக்கு மழை வாய்ப்பு! எந்தெந்த மாவட்டங்களில்? - வானிலை ஆய்வு மையம்!

கார் டயர் பஞ்சர் பார்க்க சென்றவருக்கு ரூ.8000 நஷ்டம்.. இப்படி கூட ஒரு மோசடியா?

இந்தியாவுக்கு கூடுதல் வரி விதிப்பது அநியாயம்: அமெரிக்காவுக்கு சீனா கண்டனம்..!

தங்கமுலாம் பூசிய வாஷிங் மிஷின் வாங்கி தா.. கள்ளக்காதலி கேட்டதால் கொலை..!

இந்தியாவுடன் இனி வர்த்தக பேச்சுவார்த்தை இல்லை.. டிரம்ப் போட்ட அடுத்த குண்டு?

அடுத்த கட்டுரையில்
Show comments