Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று முதல் கோவில்களில் மொட்டையடிக்க கட்டணமில்லை – மக்கள் மகிழ்ச்சி!

Webdunia
திங்கள், 6 செப்டம்பர் 2021 (08:48 IST)
தமிழகத்தில் கோவில்களில் இன்று முதல் மொட்டையடிக்க கட்டணமில்லை என்ற திட்டம் அமலுக்கு வந்தது.

தமிழகத்தில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் பல கோவில்கள் இயங்கி வரும் நிலையில், கோவில்களில் அர்ச்சனை செய்தல், மொட்டையடித்தல் மற்றும் நேர்த்திக்கடன் செய்தல் போன்றவற்றிற்கு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு டோக்கன் வழங்கும் முறை உள்ளது.

இந்நிலையில் நடைபெற்று வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் இனி கோவில்களில் மொட்டையடிக்க கட்டணம் வசூலிக்கப்படாது என அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த அறிவிப்பு இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.

பழனி முருகன் கோவிலில் மொட்டையடிக்க கட்டணம் கிடையாது என பலகை வைக்கப்பட்டுள்ளதுடன், இலவசமாக மொட்டையடிக்கப்பட்டு வருவதற்கு மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவில் இருந்து ராணா வருகை எதிரொலி: முக்கிய மெட்ரோ ரயில் நிலையம் மூடல்..!

கோவில் மேல் விழுந்த பழமையான ஆலமரம்.. பலர் பலி என அச்சம்..!

இன்று குருமூர்த்தியை சந்தித்த அண்ணாமலை.. நாளை அமித்ஷா - குருமூர்த்தி சந்திப்பு.. பாஜகவில் பரபரப்பு..!

துண்டுச்சீட்டில் கேள்விகளை எழுதி கொடுத்த திமுக எம்பி.. இந்த கேள்விகள் மட்டும் தான் கேட்க வேண்டும்?

நாளை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments