Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பழ.கருப்பையா ஆட்டம் ஆரம்பம்: அதிமுக ஊழல்களை அம்பலப்படுத்துவேன்

பழ.கருப்பையா ஆட்டம் ஆரம்பம்: அதிமுக ஊழல்களை அம்பலப்படுத்துவேன்
, திங்கள், 20 ஜூன் 2016 (09:32 IST)
அதிமுகவில் இருந்து பிரிந்த முன்னாள் துறைமுகம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பழ.கருப்பையா ஆளும் கட்சிக்கு எதிராக கடும் விமர்சனங்களை வைத்து வந்தார். இந்நிலையில் அவர் திமுகவில் இணைய திமுக தலைவர் கருணாநிதி அழைப்பு விடுத்தார். கருணாநிதியின் இந்த அழைப்பையும் பழ.கருப்பையா ஏற்றுக்கொண்டார்.


 
 
சட்டமன்ற தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்னர் தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்த பழ.கருப்பையா நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுகவில் இணைவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த இணைப்பு படலம் இப்பொழுது தான் ஆரம்பித்துள்ளது.
 
ரோமாபுரி பாண்டியன் தொடர் பாராட்டு விழாவில் பேசிய திமுக தலைவர் கருணாநிதி இடையில் ஏற்பட்ட மனக்கசப்புகளை மறந்து கருப்பையா திமுகவில் இணைய அழைப்பு விடுத்தார். கருணாநிதியின் இந்த அழைப்பை ஏற்ற அவர் தான் மனதளவில் திமுகவில் இணைந்துவிட்டேன், நான் திமுககாரன் தான், இனி திமுகவின் வெற்றிக்காகவும், வளர்ச்சிக்காவும் பாடுபடுவேன் என்றார்.
 
மேலும், ஜெயலலிதா ஆட்சி தமிழகத்தில் மீண்டும் அமைந்திருப்பது, தமிழக அரசியல் வரலாற்றில் மிகப் பெரிய விபத்து. அதே நேரம் திமுகவும் அசுர பலத்துடன் எதிர்க்கட்சியாக சட்டசபையில் அமர்ந்துள்ளது. திமுக தலைவர் கருணாநிதிக்கு, சட்டசபையில் உரிய மரியாதை அளித்து, அவருக்குரிய இருக்கையை வழங்கி, அவரது கருத்துகளைச் சபையில் பதிவு செய்ய வேண்டும்.
 
அதிமுக ஆட்சியின் அவலம், ஊழல் குறித்து ஏற்கனவே ஆதாரங்களுடன் நான் விமர்சனங்களை வைத்தேன். அதே அதிமுக ஆட்சி தொடர்வதால், ஊழல்களை அம்பலப்படுத்தும் என் பணி தொடரும் என்றார் பழ.கருப்பையா.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

16 வயது மகளை பலாத்காரம் செய்த தந்தை தற்கொலை