Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கான ஈட்டு விடுப்பு ஊதியம் நிறுத்தம் - தமிழக அரசு

Webdunia
திங்கள், 27 ஏப்ரல் 2020 (15:11 IST)
தமிழகத்தில் கொரொனா பரவலை தடுக்கும் பணியில் தமிழக அரசு பல நடவடிக்கைகள எடுத்து வருகிறது. மக்கள் தேவையில்லாமல் வெளியில் செல்வதைத் தடுக்கவும் , கூட்டமாக சேர்ந்து விளையாடுவதைத் தடுக்கவும், சமூக விலகலைக் கடைப்பிடிக்க வேண்டி போலீஸாரும் தீவிர கண்காணிப்பை மேற்கொண்டுள்ளனர்.

இந்நிலையில் கொரொனா வைரஸ் பரவலைத் தடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ள காவல்துறையினர், சுகாதாரத்துறையினர், வருவாய்த்துறையினருடன் இணைந்து கண்காணிப்புப் பணியில் ஈடுபட அரசுப் பள்ளி  ஆசிரியர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், இன்று  அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்காக  ஈட்டு விடுப்புத் தொகை  ஓராண்டு நிறுத்தி வைக்கப்படுவதாக தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

கொரோனா காரணமாக அரசு ஊழியர்களுக்காக ஈட்டு ஊதியம் நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

வைகை அணையில் வினாடிக்கு 1.500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு!

நான் கருப்பு பணம் வைக்கவில்லை வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில் தான் மக்களுக்கு உதவுகிறேன்-நடிகர் பாலா!

முதல் 4 கட்ட தேர்தல்களில் 66.95% வாக்குப்பதிவு..! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments