Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் ஆக்கிரமிப்பு அகற்றம்: நடுத்தெருவுக்கு வந்த நூற்றுக்கணக்கான குடும்பம்

Webdunia
வியாழன், 19 அக்டோபர் 2017 (17:51 IST)
சென்னை பட்டினப்பாக்கம் பகுதியில் அரசுக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து வீடு கட்டி வருடக்கணக்கில் தங்கியிருப்பவர்களை காலி செய்ய வேண்டும் என்று பொதுநல வழக்கு ஒன்று சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது.

 
 
இந்த வழக்கின் தீர்ப்பில் ஆக்கிரமிப்பு விஷயத்தில் தயவுதாட்சண்யம் கிடையாது. உடனடியாக ஆக்கிரமிப்பு பகுதியை காலி செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. இதனையடுத்து இன்று ஜேசிபி இயந்திரம் மூலம் பட்டினப்பாக்கம் பகுதியில் ஆக்கிரமிப்பை அகற்ற மாநகராட்சி அதிகாரிகள் காவல்துறை பாதுகாப்புடன் வந்தனர்.



 
 
அங்கு குடியிருக்கும் மக்களிடம் உடனடியாக வீடுகளை காலிசெய்ய வேண்டும் என்று அதிகாரிகள் கூறினர். ஆனால் பொதுமக்கள் அதற்கு ஒப்புக்கொள்ளாததால் காவல்துறையினர் உதவியுடன் பொதுமக்கள் வெளியேற்றப்பட்டு பின்னர் ஜேசிபி இயந்திரம் மூலம் வீடுகள் இடிக்கப்பட்டது. இதனால் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பம் குழந்தைகளுடன் நடுத்தெருவில் நிற்பதாகவும், அரசு அவர்களுக்கு மாற்று இடம் அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாம்பையே கடித்து கொன்ற 1 வயது குழந்தை.. பெற்றோரை அதிர்ச்சி அடைய வைத்த சம்பவம்..!

வயநாடு நிலச்சரிவில் குடும்பத்தில் 11 பேரை இழந்த இளைஞர்.. ஜூலை 30 என்ற பெயரில் உணவகம்..!

ஓட்டப்பந்தயத்தில் மயங்கி விழுந்த வீராங்கனை.. ஆம்புலன்ஸில் அழைத்து சென்றபோது பாலியல் பலாத்காரம்..!

திமுக ஆட்சியில் காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லை. எஸ்.ஐ. ராஜாராமன் மறைவு குறித்து ஈபிஎஸ்

தமிழகம் வரும் பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் அளிக்க இருக்கும் மனு.. என்ன கோரிக்கை?

அடுத்த கட்டுரையில்
Show comments