Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாம் கூட்டணி வைத்தே ஆகவேண்டும் – தினகரனுக்கு அழுத்தம் கொடுத்த நிர்வாகிகள் !

Webdunia
திங்கள், 3 ஜூன் 2019 (10:55 IST)
தேர்தலில் நாம் கூட்டணி வைக்காததால் நம்மைக் குறிவைத்து அனைவரும் தாக்குகின்றனர் என தினகரனிடம் கட்சி நிர்வாகிகள் கூறியுள்ளனர்.

மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் முடிவுகள் அமமுக, தமிழகத்தில் உள்ள திமுக மற்றும் அதிமுகவிற்கு மாற்று கட்சியாக இருக்கும் என எதிர்பார்த்த நிலையில் பேரிடியாக விழுந்துள்ளது. தமிழ்நாட்டின் 300க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளில் அமமுகவிற்கு ஒரு வாக்கு கூட பதிவாகவில்லை. முகவர்களின் வாக்குகள் கூடவா எங்களுக்கு விழவில்லை என டிடிவி தேர்தல் ஆணையத்துக்குக் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆனால் தினகரனின் இந்த குற்றச்சாட்டுக்கு ஆதரவாக எந்தக் கட்சிகளும் அவருக்குக் குரல் கொடுக்கவில்லை. இதையடுத்து இரண்டு நாட்களுக்கு  முன்னர் நடந்த அமமுகவின் தேர்தல் தோல்வி குறித்த ஆய்வுக் கூட்டத்தில்  இது குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது. அப்போது பேசிய முக்கிய நிர்வாகி ஒருவர் ‘நாம் இந்தத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டதால்தான் நம்மைக் குறிவைத்துப் தாக்குதல் நடத்தியுள்ளார்கள். அதனால் இனி முதற்கொண்டு தேர்தல்களில் நாம் கண்டிப்பாக கூட்டணி அமைத்தே தீர வேண்டும்.’ எனக் கூறியுள்ளார்.

இதற்கு என்ன பதில் சொல்வதென தெரியாத தினகரன் உங்கள் கருத்து பரிசீலிக்கப்படும் என கூறியுள்ளதாக அமமுக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தொடர்புடைய செய்திகள்

சிறுவன் உயிரிழந்ததன் எதிரொலி.! வனத்துறை வசம் செல்கிறது குற்றால அருவிகள்..!!

புது உச்சத்தை நோக்கி தங்கம் விலை.. ரூ.55000ஐ நெருங்கியது ஒரு சவரன் விலை..!

ஓட்டலுக்குள் புகுந்து சூறையாடிய 5"பேர் கொண்ட கும்பலை சி.சி.டி.வி காட்சிகளை வைத்து போலீசார் தேடுதல் வேட்டை!

மகளுக்கு சேர்த்து வைத்த 100 பவுன் நகை கொள்ளை.. ஓய்வுபெற்ற துணை வேந்தர் வீட்டில் திருட்டு..!

மழைக்காலத்தில் கூட இப்படி இல்லையே.. குன்னூரில் 17 செ.மீ. மழைப்பதிவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments