Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சூலூரில் நுழைய கமலுக்குத் தடை – கட்சி உறுப்பினரின் மனைவி புகார் !

சூலூரில்  நுழைய கமலுக்குத் தடை – கட்சி உறுப்பினரின் மனைவி புகார் !
, வியாழன், 9 மே 2019 (13:02 IST)
சூலூர் தொகுதியில் கமல் பிரச்சாரம் செய்வதற்குத் தடை விதிக்க வேண்டுமென கட்சி உறுப்பினரின் மனைவி மனு அளித்துள்ளார்.

4 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் மே 19 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த 4 தொகுதிகளுக்கான தேர்தலுக்கும் கமலின் மக்கள் நீதி மய்யம் தனது வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் 4 தொகுதிகளில் சூலூர் தொகுதியும் ஒன்று. அந்த தொகுதியில் கமல் பிரச்சாரம் செய்ய வரக்கூடாது என கோவை ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்று அளிக்கப்பட்டுள்ளது.

அந்த மனுவை மக்கள் நீதி மய்யம் கட்சியின் உறுப்பினர் பாலமுருகன் என்பவரின் மனைவிதான் கொடுத்துள்ளார். தேர்தல் பரப்புரைக்கு சென்றபோது பாலமுருகன் உயிரிழந்துள்ளார். ஆனால் அவர் இறப்புக்கு கமல் இரங்கல் கூட தெரிவிக்கவில்லை எனவும் தொண்டர்களையே கண்டு கொள்ளாத கமல் மக்கள் பிரச்சனைகளை எப்படி போக்குவார் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதனால் சூலூர் தொகுதியில் மக்கள் நலக் கூட்டணி தொண்டர்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விட்ட இடத்தை பிடிக்க, லட்சங்களை பரிசாக கொட்டும் டிக் டாக்!!