Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அன்புவிடம் பணம் வாங்கினேன் ; வீட்டை விற்றேன் - பார்த்தீபன் ஓப்பன் டாக்

Webdunia
வியாழன், 23 நவம்பர் 2017 (09:58 IST)
சசிகுமாரின் உறவினர் அசோக்குமார் கந்துவட்டி கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் பைனான்சியர் அன்புச்செழியனுக்கு எதிராக தமிழ் சினிமா உலகினர் குரல் கொடுத்து வருகின்றனர்.


 
இந்நிலையில் நடிகர் பார்த்தீபன் தனது பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது:
 
நான் சினிமா பைனானசியர் பல பேர்கிட்ட வட்டிக்கு பணம் வாங்கியிருக்கேன். அதில்  அன்பும் ஒருவர். வாங்குன பணத்தை ஒத்துகிட்ட வட்டியோட சொன்ன தேதியில கொடுக்க, நான் முதன்முதலா வாங்குன பங்களாவைக் கூட வித்திருக்கேன். ஆனா யார்கிட்டயும் தலை குனிஞ்சி நின்னதில்ல. 
 
அந்த திமிர் என்னைப் பிடிச்சிருக்கு. எனக்கும் பிடிச்சிருக்கு.நாலு படத்தில நடிச்சி கடனை அடைச்சிட்டு மறுபடியும் படமெடுப்பேன் அதுதான் எனக்கேற்பட்ட இடைவெளி.நான் ஆதங்கப்பட்டு குரல் கொடுக்கிறது சக நண்பர்களின் பிரச்சனைகளுக்கு. மத்தபடி நான் சந்திக்கிற பிரச்சனைகளை சவாலாதான் எதிர்கொள்றேன்.
 
20 லட்ச ரூபாய் கடனுக்காக வளசரவாக்கத்தில் இருந்த 74 லட்சம் மதிப்புள்ள வீட்டை விற்றேன். தற்போது அதன் மதிப்பு 74 கோடி” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments