Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஓவியர் இளையராஜா மறைவு: டுவிட்டரில் பார்த்திபன் இரங்கல்!

ஓவியர் இளையராஜா மறைவு: டுவிட்டரில் பார்த்திபன் இரங்கல்!
, திங்கள், 7 ஜூன் 2021 (10:14 IST)
ஓவியர் இளையராஜா மறைவு: டுவிட்டரில் பார்த்திபன் இரங்கல்!
கும்பகோணத்தைச் சேர்ந்த ஓவியர் இளையராஜா கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இது ஓவியமா அல்லது நிஜமா என்று சந்தேகம் ஏற்படக் கூடிய அளவில் தத்ரூபமாக ஓவியம் வரைபவர் கும்பகோணத்தைச் சேர்ந்த இளையராஜா 
 
கும்பகோணம் அருகே உள்ள செம்பியவரம்பு என்ற கிராமத்தில் பிறந்த இவர் ஓவியத்தில் கைதேர்ந்தவர். இவரது ஓவியம் உலகப் புகழ் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஓவியர் இளையராஜா அவர்களுக்கு சமீபத்தில் கொரனோ தொற்று ஏற்பட்ட நிலையில் தொற்று அவரது நுரையீரல் முழுவதும் பரவிய தெரிகிறது
 
இதனை அடுத்து நேற்று இரவு திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து ஓவியர் இளையராஜா உயிரிழந்தார். இதனையடுத்து நடிகருமான பார்த்திபன் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளதாவது: . நண்பன்/அன்புத் தம்பி ஓவியர் இளையராஜா மறைவு, மன அதிர்ச்சியையும் தாளா துயரத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. ஆறுதல் எனக்கே தேவையெனும் போது அவர் குடும்பத்தாருக்கு எப்படி?

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கட்டுப்பாடுகளுடன் திரையரங்குகளை திறக்க அனுமதிக்க வேண்டும்: உரிமையாளர்கள் கோரிக்கை