Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பைக் வாங்கித் தர மறுத்ததால் உயிரை விட்ட மகன்

பைக் வாங்கித் தர மறுத்ததால் உயிரை விட்ட மகன்

பைக் வாங்கித் தர மறுத்ததால் உயிரை விட்ட மகன்
, ஞாயிறு, 24 ஜூலை 2016 (14:03 IST)
பெற்றோர் புது பைக் வாங்கி தராததால் மகன் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.


 


புதுச்சேரியில் உள்ள மடுகரை ராம்ஜி நகர் மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த பாண்டுரங்கன் (52) அகில இந்திய வானொலியில் பணியாற்றி வருகிறார்.

சூரமங்கத்தில் உள்ள பொறியியல் கல்லூரியில் படித்து வந்த இவரது மகன் பிரசன்னா குமார் (20) தனது பெற்றோரிடம் பைக் வாங்கித் தரவேண்டும் என்று கேட்டுள்ளார். ஆனால் அவரது பெற்றோர் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக பிரசன்னா குமாருக்கும், அவரது பெற்றோருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதனால் விரக்தியடைந்த பிரசன்னா குமார் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் பிரசன்னாவின் உடலை கைப்பற்றி, பிரத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சீனாவில் கனமழை : பலி எண்ணிக்கை 225 ஆக உயர்வு