Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை மென்பொறியாளர் மூளைச்சாவு: உடலுறுப்பு தானத்திற்கு பெற்றோர் சம்மதம்

Webdunia
வியாழன், 5 ஏப்ரல் 2018 (18:27 IST)
ஆந்திராவை சேர்ந்த பெண் மென்பொறியாளர் சென்னையில் நடந்த விபத்து ஒன்றில் மூளைச்சாவு அடைந்த நிலையில் அவரது பெற்றோர் அந்த பெண்ணின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்துள்ளனர்

மைத்ரிதேஜஸ்வேனி என்ற 27 வயது மென்பொறியாளர் நேற்று தனது சகோதரருடன் பைக்கில் செல்லும்போது விபத்தில் சிக்கினார். இந்த விபத்தில் படுகாயம் அடைந்த மைத்ரிதேஜஸ்வேனி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் மூளைச்சாவு அடைந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதனையடுத்து தனது மகளின் உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரது பெற்றோர்கள் முன்வந்துள்ளனர்.  மைத்ரி உயிருடன் இருக்கும்போதே உடலுறுப்பு தானத்தில் ஆர்வமாக இருந்தவர் என்றும், அவரது ஆசைப்படியே உடலுறுப்பு தானம் செய்ய முடிவு செய்துள்ளதாகவும், அவரது பெற்றோர் மருத்துவர்களிடம் தெரிவித்தனர். இதனையடுத்து இன்னும் ஓரிரு நாளில் மைத்ரியின் உறுப்புகள், தானம் வேண்டி விண்ணப்பம் செய்தவர்களுக்கு பொருத்தப்படவுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தெலுங்கை எங்க மேல திணிக்கிறாங்க.. தெலுங்கானா மாணவர்கள் போராட்டம்!

இன்றிரவு 12 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

மத்திய அரசு அதிக நிதியை ஒதுக்கியும் சிலர் அழுது கொண்டே இருக்கிறார்கள்: பிரதமர் மோடி

பிரதமர் மோடியின் இலங்கை பயணம்.. சில நிமிடங்களில் 14 தமிழக மீனவர்கள் விடுதலை..!

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.. தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பா?

அடுத்த கட்டுரையில்
Show comments