விருது வாங்கியவுடன் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த தொழிலதிபர்

Webdunia
வியாழன், 5 ஏப்ரல் 2018 (17:57 IST)
ஆக்ராவில் சிறந்த தொழிலதிபர் என்ற விருதை வாங்கிய தொழிலதிபர் ஒருவர் சந்தோஷத்தில் மேடையிலேயே நடனம் ஆடினார். அப்போது அவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த பரிதாப சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

சமீபத்தில் ஆக்ராவில் விருது விழங்கும் விழா ஒன்று நடைபெற்றது. இதில் ஒவ்வொரு துறையிலும் சாதனை புரிந்தவர்களுக்கு விருது வழங்கப்பட்டது. இதில் சிறந்த தொழிலதிபர் என்ற விருதை 53 வயது விஷ்ணுபாண்டே என்பவருக்கு வழங்கப்பட்டது. விருது வழங்கும் மேடையில் அவரது பெயர் வாசிக்கப்பட்டதும் சந்தோஷமாக எழுந்து மேடைக்கு சென்ற விஷ்ணுபாண்டே விருதை மகிழ்ச்சியுடன் பெற்று கொண்டார்

விருது கிடைத்த மகிழ்ச்சியில் விருதினை கையில் வைத்து கொண்டே மேடையில் நடனமாடினார். அவரை உற்சாகப்படுத்தும் வகையில் அனைவரும் கைதட்டினர். இந்த நிலையில் திடீரென அவர் மேடையில் மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை அங்கிருந்த மருத்துவர் ஒருவர் சோதனை செய்தபோது விஷ்ணுபாண்டே மாரடைப்பால் உயிரிழந்ததாக தெரிவித்தார். இதனால் விருது வழங்கும் விழா சோகமயமானது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஹலால் சான்றிதழ் பெற்ற பொருட்களை தவிர்க்கவும்: யோகி ஆதித்யநாத் எச்சரிக்கையால் பரபரப்பு!

ஜெய்ஷ்-இ-முகமதுவின் பெண்கள் 'ஜிஹாத்' ஆன்லைன் பயிற்சி வகுப்பு: மசூத் அஸ்ஹர் சகோதரி தொடங்கினாரா?

ஏர் இந்தியாவின் முக்கிய அதிகாரி தங்கியிருந்த அறையில் மர்ம மரணம்: தற்கொலை குறிப்பும் இல்லை!

இதுகூட தெரியவில்லையா? ஆர்ஜேடி வேட்பாளர் ஸ்வேதா சுமன் வேட்புமனு நிராகரிப்பு..!

மாணவர்களை 3 மணிக்கே வீட்டுக்கு அனுப்பிவிடுங்கள்: மாவட்ட கலெக்டர் அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments