Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஜெயலலிதா இல்லத்திற்கு அருகிலேயே குடியேறும் ஓபிஎஸ்

ஜெயலலிதா இல்லத்திற்கு அருகிலேயே குடியேறும் ஓபிஎஸ்
, புதன், 8 மார்ச் 2017 (12:15 IST)
முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்  போயஸ்கார்டனில் குடியேற உள்ளார்.


 


முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள பங்களாவில் வசித்து வருகிறார். தமிழக அமைச்சர்களுக்கான பங்களா அது. கடந்த 2011ம் ஆண்டு முதல் அந்த வீட்டில் வசித்து வருகிறார். இந்த நிலையில் சசிகலாவுக்கு எதிராக அவர் போராட்டத்தை துவக்கினார். சசிகலா மீது கடுமையான குற்றச்சாட்டுகளை வைத்தார். இதனால் அவரை கட்சியிலிருந்து விலக்கி சசிகலா உத்தரவிட்டார். இதையடுத்து அ.தி.மு.க. சசிகலா அணி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் அணி என இரண்டாக உடைந்தது. ஓபிஎஸ்க்கு ஆதரவும் அதிகரித்தது.

இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் புதிய அரசு பதவியேற்றது. இதையடுத்து பன்னீர் செல்வத்திற்கு நெருக்கடிகள் அதிகரித்தன. உடனடியாக வீட்டை காலி செய்ய வேண்டும் என்று பொதுப்பணிதுறை அவருக்கு நோட்டீஸ் அனுப்பியது. இதையடுத்து அவர் சென்னையின் முக்கிய இடங்களில் வீடு தேடினார். தற்போது போயஸ்கார்டனில் ஜெயலலிதா இல்லத்திற்கு அருகே ஒரு வீட்டினை தேர்வு செய்துள்ளார். இதையடுத்து உடனடியாக அந்த இல்லத்தில் குடியேற முடிவு செய்துள்ளார்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மோசமான வாரத்தைகளால் பேசுகிறார்கள்: லட்சுமி ராமகிருஷ்ணன், குஷ்பு மீது போலீஸில் புகார்