தூத்துக்குடியில் திடீரென உள்வாங்கிய கடல்.. அமாவாசை காரணமா?

Webdunia
புதன், 16 ஆகஸ்ட் 2023 (09:32 IST)
தமிழகத்தில் உள்ள ஒரு சில கடற்கரைகள் திடீரென உள்வாங்குவது வழக்கமாக இருந்து வருகிறது என்பதும் திருச்செந்தூரில் அடிக்கடி கடல் உள்வாங்கும் என்பதையும் பார்த்து வருகிறோம். 
 
அந்த வகையில் தற்போது தூத்துக்குடியில் திடீர் என இன்று கடல் உள்வாங்கியதால் அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
தூத்துக்குடி துறைமுகம் சாலையில் சுமார் 40 அடி தூரத்திற்கு கடல் உள்வாங்கியுள்ளதாகவும் கடலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகள் கடல் உள்வாங்கியதால் கரைத்தட்டி நின்றதாகவும் கூறப்படுகிறது. 
 
இது குறித்து கடல் சார்ந்த நிபுணர்கள் கூறிய போது அமாவாசை காரணமாக கடல் உள்வாங்கி இருக்கலாம் என்று தெரிவித்தனர்,. 
 
திடீரென்று 40 அடி தூரத்திற்கு கடல் உள்வாங்கியதால் அந்த பகுதி மக்கள் அச்சத்தில் இருந்தாலும் பயப்படுவதற்கு எதுவும் இல்லை என கடல் சார்ந்த நிபுணர்கள் மக்களுக்கு ஆறுதல் அறிவித்து வருகின்றனர்.
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழ்நாட்டில் மேக வெடிப்பா? ஆய்வு மையத்தின் தென்மண்டலத் தலைவர் அமுதா விளக்கம்..!

உலகின் மிகப்பெரிய லூவ்ரே அருங்காட்சியகத்தில் பயங்கர கொள்ளை: மன்னர் நெப்போலியன் நகைகள் திருட்டு!

சென்னை, மதுரை உட்பட 29 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு! வானிலை எச்சரிக்கை..!

நட்சத்திர விடுதியில் 19 வயது இளைஞன் வைத்த மதுவிருந்து.. தொழிலதிபர் அப்பாவை கைது செய்த போலீசார்.

டிரம்ப் எங்களுக்கு அதிபராக வேண்டும்.. வீதியில் இறங்கிய போராடும் அமெரிக்க மக்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments