Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாம்பன் பகுதியில் திடீரென 200 மீட்டர் தூரத்திற்கு உள்வாங்கிய கடல்நீர்.. மீனவர்கள் அச்சம்..!

Mahendran
வியாழன், 11 ஏப்ரல் 2024 (11:02 IST)
தமிழக கடற்கரை ஓர பகுதிகளில் அவ்வப்போது திடீரென கடல் உள்வாங்கி வரும் வருவதை பார்த்து வருகிறோம். குறிப்பாக தூத்துக்குடி திருச்செந்தூர் கடல் அவ்வப்போது உள்வாங்கும் என்றும் அப்போது அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் மீனவர்கள் அச்சப்படுகின்றனர் என்பதையும் பார்த்து வருகிறோம். 
 
இந்த நிலையில் தற்போது வந்த தகவல் படி பாம்பன் பகுதியில் திடீரென 200 மீட்டர் தூரத்திற்கு கடல் நீர் உள்வாங்கிதாகவும் இதனால் அந்த பகுதி மீனவர்கள் அச்சமடைந்ததாகவும் கூறப்படுகிறது 
 
கடல் நீர் உள்வாங்கியதால் நாட்டுப் படகுகள் தரைதட்டி இருக்கும் விலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சியாளர்கள் இது குறித்து தெரிவித்த போது காலநிலை மாற்றம் காரணமாக கடல் நீர் உள்வாங்கி இருக்கலாம் என்றும் ஒரு சில நிமிடங்களில் கடல் நீர் இயல்பு நிலை திரும்பும் என்றும் எனவே மீனவர்கள் அச்சப்பட வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளனர் 
 
இருப்பினும் அந்த பகுதியில் உள்ள மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் கடல் நீர் உள்வாங்கியதை அச்சத்துடனே பார்த்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.. 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாஜகவுடன் கூட்டணியால் அதிருப்தி.. அதிமுக பிரமுகர் கட்சியில் இருந்து விலகல்..!

மனைவியுடன் கள்ளத்தொடர்பு.. பக்கத்து வீட்டுக்காரனின் ஆணுறுப்பை பல்லால் கடித்த கணவர்..!

மது போதையில் காவலரை தாக்கிய திமுகவினர்.. அண்ணாமலை ஆவேச அறிக்கை..!

விஜயகாந்தை சிங்கம் என மோடி அழைப்பார்.. பிரேமலதா தகவல்..!

தமிழக மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்து ஏன் சொல்லவில்லை: முதல்வருக்கு நயினார் நாகேந்திரன் கேள்வி

அடுத்த கட்டுரையில்
Show comments