Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாலையில் மணல் தேங்குவதை தடுக்க இப்படியெல்லாமா யோசிப்பாங்க..??

Arun Prasath
வியாழன், 26 செப்டம்பர் 2019 (17:57 IST)
தனுஷ்கோடியில் சூறைக்காற்றினால் சாலைகளில் மணல் தேங்குவதை தடுக்க, பனைமட்டைகளால் தடுப்புகள் அமைக்கப்பட்டிருப்பது வேடிக்கையான செயலாக பார்க்கப்படுகிறது.

தனுஷ்கோடியில் சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக தார்ச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. அங்கு ஏப்ரல் முதல் டிசம்பர் வரை சூறாவளி காற்று வீசுவதால், மணற்குன்றுகள் கலைந்து சாலைகளில் மணல் குவிகிறது.

எனினும் சாலைகளில் மணல் தேங்குவதால் அடுத்தக்கட்ட முயற்சியாக தனுஷ்கோடியில் நெடுஞ்சாலைத்துறையினர் பனைமட்டைகளால் தடுப்புகளை ஏற்படுத்தியுள்ளனர். இதனை அப்பகுதி மக்கள் பெரும் வேடிக்கையோடு நகைக்கின்றனர்.

மேலும் இது குறித்து நெடுஞ்சாலைத் துறையை சேர்ந்த ஒருவர் கூறுகையில், பனைமட்ட தடுப்புகள் மூலம் செயற்கையாக மணல் குன்றுகளை உருவாக்கும் இந்த யோசனை கூகுள் இணையத்தளத்தில் கிடைத்ததாக தெரிவித்துள்ளார். சாலைகளின் மணல் தேங்குவதை தடுக்க பனைமட்டைகளால் தடுப்பு ஏற்படுத்தியுள்ள செய்தி, வேடிக்கையான ஒன்றாகவும் நகைப்புக்குறியவையாகவும் பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கமல்ஹாசனை சந்தித்த துணை முதல்வர் உதயநிதி.. மரியாதை நிமித்த சந்திப்பா?

பாராளுமன்றத்திற்கு இப்போது தேர்தல் நடந்தால் பாஜகவுக்கு மெஜாரிட்டி: கருத்துக்கணிப்பு..!

கார் ஓட்டிக்கொண்டே லேப்டாப்பில் வேலை பார்த்த பெண்.. காவல்துறை அதிரடி நடவடிக்கை..!

ரூ.150 கோடி மதிப்பில் ஆர்.எஸ்.எஸ். அலுவலகம்.. 4 ஏக்கர்.. 3 கோபுரங்கள்.. 12 மாடிகள்..!

தமிழகத்துக்கு மத்திய அரசு வழங்கிய ரூ.1,050 கோடி எங்கே சென்றது? அண்ணாமலை கேள்வி..!

அடுத்த கட்டுரையில்
Show comments