மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அறங்காவலர் பிடிஆர் தாயார் நியமனம்

Webdunia
புதன், 8 நவம்பர் 2023 (18:25 IST)
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அறங்காவலர்களில் ஒருவராக அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அவர்களின் தாயார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.  

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் தக்காராக பணிபுரிந்த கண்ணன் என்பவர் கடந்த மே மாதம் உயிரிழந்ததை அடுத்து  புதிய தக்கார் நியமனம் செய்யப்பட்டு சமீபத்தில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்த நிலையில்  தக்கார் பதவியை பிடிக்க பலர் முயற்சி செய்த நிலையில்  க.செல்லத்துரை அவர்களுக்கு அந்த பதவி கிடைத்தது. இந்த நிலையில் தற்போது  அறங்காவலர் குழு நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.  

இந்த குழுவில் துரை சொக்கிகுளம் வல்லபாய் ரோடு சுப்பராயன் என்பவரின் மகள் ருக்மணி பழனிவேல்ராஜன் , மதுரை அண்ணாநகரைச் சேர்ந்த பி.கே.எம்.செல்லையா, மதுரை காந்தி நகர் சூமேக்கர் தெருவைச் சேர்ந்த சி.கிருஷ்ணன் மகள் டி.சுப்புலெட்சுமி, மதுரை கே.கே.நகர் ஏரிக்கரைத்தோட்டம் பகுதியைச் சேர்ந்த மு.சீனிவாசன், மதுரை அரசரடி ஹார்விநகர் 4வது தெருவைச் சேர்ந்த எம்.சேகர் என்பவரின் மகள் எஸ்.மீனா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த குழுவில் உள்ள ருக்மணி பழனிவேல்ராஜன், அமைச்சர் பிடிஆர் அவர்களின் தாயார் என்பது குறிப்பிடத்தக்கது.


Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காஞ்சிபுரத்தில் மீட்டிங்!.. நிர்வாகிகளை சந்திக்க வரும் விஜய்!.. பரபர அப்டேட்!...

பாகிஸ்தானில் இருந்து கடிதங்களை கழிவறை பேப்பராக பயன்படுத்துவேன்.. சிஐஏ முன்னாள் அதிகாரி..!

அமைச்சர் ஐ.பெரியசாமி மகள் இந்திராணி வீட்டில் ஜிஎஸ்டி சோதனை.. திண்டுக்கல்லில் பரபரப்பு

SIR மூலம் ஒரு கோடி வாக்காளர்கள் நீக்கப்படலாம்.. பாஜக நிர்வாகி அதிர்ச்சி தகவல்..!

எக்ஸ்பிரஸ் ரயில் ஏசி பெட்டியில் மேகி சமைத்த பெண்: பயணி மீது பாதுகாப்பு சர்ச்சை!

அடுத்த கட்டுரையில்
Show comments