Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாகிஸ்தான் நாட்டுக்கு ரூ. 100 கோடி கடன் : ஆசிய வளர்ச்சி வங்கி ஒப்புதல் ...

Webdunia
வெள்ளி, 6 டிசம்பர் 2019 (20:36 IST)
பாகிஸ்தான் நாட்டில் சில மாதங்களாக கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால், அந்த நாட்டின் பிரதமர் இம்ரான் கான் பல்வேறு சிக்கன நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.  இந்நிலையில், அந்த நாட்டு அரசுக்கு உதவும் வகையில்  பாகிஸ்தானுக்கு அவசரகால கடனாக ரூ100 கோடி வழங்க ஆசிய வளர்ச்சி வங்கி ஒப்புதல் அளித்துள்ளது.
இதுகுறித்து ஆசிய வளர்ச்சி வங்கியின் மத்திய மற்றும் மேற்கு ஆசியாவிற்கான நிர்வாக இயக்குநர்  வெர்னர் லெய்பாக் கூறியுள்ளதாவது :
 
பாகிஸ்தான் நாட்டில் சில மாதங்களாக மிகக் குறைந்த அந்நியச் செலாவணி கையிருப்பு மற்றும் அதிகமான கடன் சுமை உள்ளதால், பாகிஸ்தான் அரசு கடும் பொருளாதார  சவால்களைச் சந்தித்துள்ளது.
 
அதனால், ஆசிய வளர்ச்சி வங்கியின் சார்பாக  வழங்கப்படும் கடனானது பாகிஸ்தானில் நிலவுகிற பொருளாதார நெருக்கடியை கட்டுப்படுத்த உதவும். நிறுவனங்களின் வளர்ச்சியை சீராக்கவும் உதவுமென கூறியுள்ளது..
 
இந்த பண உதவி பாகிஸ்தான் நாட்டுக்கு கிடைத்தால், அந்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பேருதவியாக இருக்கும் என தகவல் வெளியாகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிறார்களுடன் பாலியல் உறவா? ட்ரம்ப் மீது வெடிக்குண்டை போட்ட எலான் மஸ்க்! - அதிர்கிறது அமெரிக்கா!

பீகார் சென்றது தமிழக முதியவரின் சடலம்.. உறவினர்கள் அதிர்ச்சி.. அரசு மருத்துவமனையில் அலட்சியம்..!

அன்னைக்கி காலையில 6 மணி இருக்கும்.. முதல்வரின் ட்வீட் குறித்து கேலி செய்த ஈபிஎஸ்..!

திமுக கூட்டணியில் தேமுதிக இணைகிறதா? அமைச்சர் கே.என்.நேரு தகவல்..!

நாட்டில் நல்லது நடக்க வேண்டும் என்று சிந்திக்க கூடியவர் ஆடிட்டர் குருமூர்த்தி: நயினார் நாகேந்திரன்

அடுத்த கட்டுரையில்
Show comments