Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாண்டி பஜார் வணிக வளாகத்தில் திடீர் தீ! – சென்னையில் பரபரப்பு!

Webdunia
ஞாயிறு, 6 பிப்ரவரி 2022 (13:30 IST)
சென்னை பாண்டி பஜாரில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் திடீரென ஏற்பட்ட தீ விபத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையின் தி நகர் பாண்டி பஜார் பகுதியில் ஏராளமான கடைகளும், வணிக வளாகங்களும் செயல்பட்டு வருகின்றன. மக்கள் அதிகமாக பொருட்கள் வாங்க வரும் பகுதி என்பதால் எப்போது கூட்ட நெரிசலாக இந்த பகுதி இருக்கும்.

இந்நிலையில் இன்று பாண்டி பஜாரில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் திடீரென தீப்பிடித்துள்ளது. 3 தளங்கள் கொண்ட வணிக வளாகத்தில் தீப்பற்றிய நிலையில் விரைந்த தீயணைப்பு வீரர்கள் மிகுந்த போராட்டத்திற்கு பின் தீயை அணைத்துள்ளனர். இந்த தீ விபத்தில் வளாகத்தில் செயல்பட்டு வந்த ஜவுளிக்கடை மற்றும் பைனான்ஸ் அலுவலகம் ஆகியவை சேதமடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கூல்ட்ரிங்ஸில் மயக்க மருந்து கலந்து வன்கொடுமை! சிசிடிவியில் வெளியான ட்விஸ்ட்! - சீரியல் நடிகர் கைது!

பாஜகவில் இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்களுக்கு இடமில்லை! குப்பையில் வீசிவிட்டார்கள்! - அலிஷா அப்துல்லா வேதனை!

டி.டி.வி.தினகரனுடன் பேசினேன்; அவர் மறுபரிசீலனை செய்வார்.. அண்ணாமலை நம்பிக்கை..!

ஆப்கானிஸ்தானில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 2,200க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

சென்னை உட்பட 5 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

அடுத்த கட்டுரையில்
Show comments