Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை வருகிறார் ஒவைசி: அமமுக தேர்தல் அறிக்கை கூட்டத்தில் பங்கேற்பு!

Webdunia
செவ்வாய், 9 மார்ச் 2021 (18:38 IST)
ஏப்ரல் 6-ஆம் தேதி தமிழகத்தில் நடைபெறவிருக்கும் தேர்தலில் அதிமுக, திமுக, மக்கள் நீதி மய்யம், சீமான் கட்சி மற்றும் தினகரன் கட்சி ஆகிய ஐந்து கூட்டணிகள் போட்டியிடுகின்றன. இதில் அமமுக கூட்டணியின் தேர்தல் அறிக்கை வரும் 12ஆம் தேதி சென்னையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது
 
இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி இந்த பொதுக்கூட்டத்தில் அமமுகவின் கூட்டணி கட்சியான ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சியின் தலைவர் ஓவைசியின் பங்கேற்க இருக்கிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் அவர் அந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பிரசாரம் செய்வார் என்றும் கூறப்பட்டு இருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
ஏற்கனவே பீகார் மாநிலத்தில் நடந்த தேர்தலில் ஓவைசியின் கட்சி ஓட்டுகளை பிரித்ததால் தான் காங்கிரஸ் கூட்டணி தோல்வி அடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அதே நிலை தமிழகத்திலும் ஏற்படுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாடு ஒரே கணவர் திட்டமா? பஞ்சாப் முதல்வர் ஆவேசம்..!

மதுரை சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்க தடை: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.

உலக நாடுகளின் ஆதரவை பெற்றுள்ளோம்: சென்னை திரும்பிய கனிமொழி பேட்டி..!

நீட் மறு தேர்வு நடத்த முடியாது.. மத்திய அரசு வாதம்.. ஜூன் 6ஆம் தேதி தீர்ப்பு..!

யார் அந்த சார்? 8 கேள்விகள் கேட்ட நயினார் நாகேந்திரன்.. பதிலுக்காக காத்திருப்போம்!

அடுத்த கட்டுரையில்
Show comments