Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சென்னை வருகிறார் ஒவைசி: அமமுக தேர்தல் அறிக்கை கூட்டத்தில் பங்கேற்பு!

சென்னை வருகிறார் ஒவைசி: அமமுக தேர்தல் அறிக்கை கூட்டத்தில் பங்கேற்பு!
, செவ்வாய், 9 மார்ச் 2021 (18:38 IST)
ஏப்ரல் 6-ஆம் தேதி தமிழகத்தில் நடைபெறவிருக்கும் தேர்தலில் அதிமுக, திமுக, மக்கள் நீதி மய்யம், சீமான் கட்சி மற்றும் தினகரன் கட்சி ஆகிய ஐந்து கூட்டணிகள் போட்டியிடுகின்றன. இதில் அமமுக கூட்டணியின் தேர்தல் அறிக்கை வரும் 12ஆம் தேதி சென்னையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது
 
இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி இந்த பொதுக்கூட்டத்தில் அமமுகவின் கூட்டணி கட்சியான ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சியின் தலைவர் ஓவைசியின் பங்கேற்க இருக்கிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் அவர் அந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பிரசாரம் செய்வார் என்றும் கூறப்பட்டு இருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
ஏற்கனவே பீகார் மாநிலத்தில் நடந்த தேர்தலில் ஓவைசியின் கட்சி ஓட்டுகளை பிரித்ததால் தான் காங்கிரஸ் கூட்டணி தோல்வி அடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அதே நிலை தமிழகத்திலும் ஏற்படுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மனித நேய மக்கள் கட்சிக்கு சின்னம் ஒதுக்கிய தேர்தல் ஆணையம்!