Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தறிகெட்டு பைக்குகளை மோதி வீசி சென்ற வேன்! – ஒட்டன்சத்திரம் அருகே அதிர்ச்சி சம்பவம்!

Webdunia
வெள்ளி, 20 மே 2022 (12:26 IST)
திண்டுக்கல் மார்க்கெட்டிலிருந்து சென்ற மினிவேன் ஒன்று எதிரே வந்த பைக்குகள் பலவற்றை மோதி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பூ மார்க்கெட்டிலிருந்து பூக்களை லோடு ஏற்றிக் கொண்டு மினிவேன் ஒன்று கோவை புறப்பட்டுள்ளது.

ஒட்டன்சத்திரம் அருகே பைபாஸில் சென்றுக் கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்த வேன் எதிரே சென்றுகொண்டிருந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. அதில் இருசக்கர வாகனத்தில் சென்ற இருவரும் தூக்கி வீசப்பட்ட நிலையில் சம்பவ இடத்திலேயே இருவரும் உயிரிழந்தனர்.

பின்னர் சாலையின் குறுக்கே இருந்த தடுப்பு பலகையை உடைத்துக் கொண்டு எதிர் சாலையில் பாய்ந்த வேன் அங்கு சென்றுக் கொண்டிருந்த பைக்குகளையும் மோதி வீசிக்கொண்டு சென்றது. இதில் மேலும் ஒருவர் உயிரிழந்தார். பலர் படுகாயமடைந்தனர்.
இந்த விபத்தை ஏற்படுத்திய வேன் டிரைவர் தப்பி ஓடிய நிலையில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து டிரைவரை தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments