3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட்.. அடுத்த 3 நாட்கள் மழை வாய்ப்புள்ள இடங்கள்!

Prasanth K
வெள்ளி, 13 ஜூன் 2025 (08:51 IST)

தமிழ்நாட்டில் பல பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் அடுத்த 3 நாட்களுக்கு மழை வாய்ப்புள்ள பகுதிகள் குறித்து வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

 

அதன்படி, இன்று கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகளில், நீலகிரி, மற்றும் தென்காசி மாவட்டங்களில் கன மழை முதல் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. கன்னியாக்குமரி, திருநெல்வேலி, தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.

 

நாளை (ஜூன் 14) நீலகிரி மாவட்டத்தின் சில பகுதிகளில் அதி கனமழை வரை பெய்யும் வாய்ப்புள்ளது. கோவை, நெல்லை மாவட்ட மலைப்பகுதிகள்,, தென்காசி மற்றும் கன்னியாக்குமரி மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக் கூடும். தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு

 

நாளை மறுநாள் (ஜூன் 15) நீலகிரி மாவட்டத்தின் சில பகுதிகளில் கனமழை முதல் அதி கனமழை வரை பெய்ய வாய்ப்பு. தேனி, தென்காசி மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை வரையிலும், திருப்பூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், கன்னியாக்குமரி மாவட்டங்களின் சில பகுதிகளில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக கூட்டத்தில் பங்கேற்பு.. அதிமுகவுடனும் ரகசிய பேச்சுவார்த்தை.. தேமுதிகவின் குழப்பமான நிலை..!

இரவு 11 மணிக்கு மேல் அந்த பெண்ணுக்கு என்ன வேலை? கோவை கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை குறித்து தமிழக எம்பி..!

டாஸ்மாக் சரக்குக்கு பேர் வீரனா?!.. கொதிக்கும் சீமான்!.. ட்ரோல் செய்யும் நெட்டிசன்ஸ்!...

SIR நடவடிக்கை ஆரம்பித்து 2 நாள் தான்.. குளத்தில் எறியப்பட்ட 100க்கும் மேற்பட்ட போலி ஆதார் அட்டைகள்..!

ஓட்டு போட வந்த துணை முதல்வர் மீது கற்கள், மாட்டுச்சாணம் வீசிய பொதுமக்கள்: பீகாரில் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments