Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிமுக வங்கி கணக்குகளை முடக்குங்க… ஷாக் கொடுக்கும் ஓபிஎஸ்!

Webdunia
சனி, 23 ஜூலை 2022 (12:32 IST)
அதிமுக-வின் 7 வங்கி கணக்குகளை முடக்க கோரி சென்னை மண்டல RBI இயக்குநருக்கு ஓபிஎஸ் கடிதம் எழுதியுள்ளார். 


அதிமுகவில் ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் ஆகிய இரு பிரிவு ஏற்பட்ட நிலையில் தற்போது ஈபிஎஸ் கை ஓங்கியுள்ளது. இடைக்கால பொதுச்செயலாளர், எதிர்க்கட்சி தலைவர், எதிர்க்கட்சித் துணைத் தலைவர் என அனைத்து முக்கிய பதவிகளும் ஈபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் இடம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனைத்தொடர்ந்து ஓபிஎஸ் ஆதரவாளர்கள் சிலர் அதிமுக மாவட்ட செயலாளர்களாக இருந்து வரும் நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டச் செயலாளர்களையும் மாற்ற ஈபிஎஸ் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஓபிஎஸ் தனது தரப்பில் இருந்து ஈபிஎஸ் தரப்பினருக்கு அதிர்ச்சி தரும் விதமாக அதிமுக-வின் 7 வங்கி கணக்குகளை முடக்க கோரி சென்னை மண்டல RBI இயக்குநருக்கு ஓபிஎஸ் கடிதம் எழுதியுள்ளார்.  கரூர் வைஸ்யா, எஸ்பிஐ, இந்தியன் வங்கி உள்ளிட்ட 7 கணக்கு பணப்பரிவர்த்தனை நிறுத்த ஓபிஎஸ் கோரிக்கை வைத்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிந்து நதியில் அணை கட்டினால் அதை இடிப்போம்.. பாகிஸ்தான் அமைச்சர்.. மத்திய அமைச்சர் பதிலடி..!

கத்தரி வெயிலை கண்டு பயப்பட வேண்டாம்.. நல்ல செய்தி சொன்ன வெதர்மேன்..!

தமிழகத்தில் சொத்து வரி மீண்டும் உயர்வா? அரசின் விளக்கம்..!

இந்தியா போர் தொடுத்தால் தக்க பதிலடி கொடுப்போம்: பாகிஸ்தான் ராணுவ தளபதிகள்..!

ஸ்கைப் சேவைக்கு விடை.. மே 5ல் நிறைவு பெறுகிறது!

அடுத்த கட்டுரையில்
Show comments