Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இதை.. இதைத்தான் நாங்கள் எதிர்பார்த்தோம் - ஓ.பி.எஸ் மகிழ்ச்சி

இதை.. இதைத்தான் நாங்கள் எதிர்பார்த்தோம் - ஓ.பி.எஸ் மகிழ்ச்சி
, சனி, 4 மார்ச் 2017 (11:10 IST)
அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா நியமனம் செய்யப்பட்டது செல்லாது என்று ஓபிஎஸ் தரப்பினர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தேர்தல் ஆணையத்திடம் புகார் மனு ஒன்றை அளித்திருந்தனர். 


 

 
இந்த புகார் மனுவுக்கு சசிகலா தரப்பில் இருந்து பிப்ரவரி 28-ம் தேதிக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் சசிகலாவுக்கு அவர் தற்போது இருக்கும் பெங்களூர் சிறை முகவரிக்கு நோட்டீஸ் அனுப்பியது. இந்த நோட்டீசுக்கு சசிகலாவால் அவசரகதியில் துணை பொதுச்செயலாளராக நியமனம் செய்யப்பட்ட டிடிவி தினகரன் சமிபத்தில் பதில் அனுப்பியிருந்தார். ஆனால் இந்த பதில் மனுவை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொள்ளவில்லை
 
இதுகுறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: " கட்சியில் அதிகாரப்பூர்வ பதவியில் இருப்பவரே இந்த மனுவிற்கு பதிலளிக்க முடியும். தேர்தல் ஆணையத்திற்கு கொடுக்கப்பட்ட மனுவில் தினகரனின் பொறுப்பு குறித்த எந்த தகவலும் இல்லை. . தினகரன் அதிமுகவின் எந்த பொறுப்பிலும் இல்லை. எனவே இந்த கடிததை ஏற்க முடியாது.
 
சசிகலா கையெழுத்திட்ட கடித்தினை அவர் சார்பில் அங்கிகரிக்கப்பட்ட நபர் யாரேனும் கொடுக்கலாம். வரும் மார்ச் 10-ம் தேதிக்குள் சசிகலா கையொப்பமிட்ட பதிலை அனுப்ப வேண்டும்" இவ்வாறு தேர்தல் ஆணையத்தின் செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது
 
சசிகலா சிறைக்கு செல்லும் ஒருசில மணி நேரத்திற்கு முன்னர் துணை பொதுச்செயலாளர் பதவியை டிடிவி தினகரனுக்கு வழங்கினார். ஆனால் இதுகுறித்து முறைப்படி தேர்தல் ஆணையத்திற்கு எந்தவித தகவலும் அனுப்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்நிலையில் இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் “ இதைத்தான் நாங்கள் எதிர்பார்த்தோம். தேர்தல் ஆணையத்தின் முடிவை நாங்கள் வரவேற்கிறோம்.  அதிமுக சட்டவிதிகளின் படி பொதுச் செயலாளர் என்பது அடிப்படை உறுப்பினர்களால் தேர்தல் நடத்தி  மட்டுமே தேர்ந்தெடுக்க முடியும். அதில் தற்காலிக பொதுச் செயலாளர் பதவியே அதிமுகவில் கிடையாது.  விரைவில் அந்த பதவியிலிருந்து தேர்தல் ஆணையம் அவரை தூக்கி எறியப்படுவார்” என அவர் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மெக்டொனால்டு கடையின் வாடிக்கையாளரா நீங்கள்; அப்போ கட்டாயம் படிங்க!!