ராமநாதபுரம் தொகுதியில் இன்னொரு சுயேட்சை ஓபிஎஸ்.. வாக்காளர்கள் குழப்பமடைய வாய்ப்பு..!

Mahendran
திங்கள், 25 மார்ச் 2024 (19:18 IST)
ராமநாதபுரம் தொகுதியில் முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுகிறார் என்பதும் அவர் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம். இந்நிலையில் அதே ராமநாதபுரம் தொகுதியில் இன்னொரு ஓ பன்னீர்செல்வம் என்ற பெயரில் ஒருவர் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுவதற்கு வேட்புமனு தாக்கல் செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
இருவரும் ஒரே பெயரில் ஒரே இனிஷியலில் இருப்பதால் வாக்காளர்கள் குழப்பம் அடைய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. ராமநாதபுரம்  தொகுதியில் பாஜக சார்பில் ஓ பன்னீர்செல்வம் போட்டியிடும் நிலையில் அதே தொகுதியில் உசிலம்பட்டி மேக்கிழார்பட்டி என்ற பகுதியைச் சேர்ந்த ஓ பன்னீர் செல்வம் என்பவர் சுயேட்சையாக போட்டியிட இன்று மனு தாக்கல் செய்து உள்ளார் 
 
ஒரே பெயரில் இரண்டு ஒரே இனிஷியலில் ஒரே  ஒரே தொகுதிகள் 2 வேட்பாளர்கள் போட்டியிடுவதால் சின்னத்தை வைத்து மட்டுமே வாக்காளர்கள் வேறுபடுத்தி பார்க்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் ஓபிஎஸ் தரப்பு இது குறித்து கூறிய போது இது திமுகவின் சதி என்று வழக்கம்போல் குற்றம் சாட்டி வருகின்றனர். 

ALSO READ: பதவி இல்லாமல் இருந்தாலும் பாடுபடுவேன்: தர்மபுரி எம்பி செந்தில் குமார்
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக கூட்டத்தில் பங்கேற்பு.. அதிமுகவுடனும் ரகசிய பேச்சுவார்த்தை.. தேமுதிகவின் குழப்பமான நிலை..!

இரவு 11 மணிக்கு மேல் அந்த பெண்ணுக்கு என்ன வேலை? கோவை கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை குறித்து தமிழக எம்பி..!

டாஸ்மாக் சரக்குக்கு பேர் வீரனா?!.. கொதிக்கும் சீமான்!.. ட்ரோல் செய்யும் நெட்டிசன்ஸ்!...

SIR நடவடிக்கை ஆரம்பித்து 2 நாள் தான்.. குளத்தில் எறியப்பட்ட 100க்கும் மேற்பட்ட போலி ஆதார் அட்டைகள்..!

ஓட்டு போட வந்த துணை முதல்வர் மீது கற்கள், மாட்டுச்சாணம் வீசிய பொதுமக்கள்: பீகாரில் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments