தமிழ்நாடு சட்டப்பேரவையில் நொந்துப்போய் பேசிய ஓபிஎஸ்

Webdunia
சனி, 28 ஆகஸ்ட் 2021 (13:30 IST)
நதியினில் வெள்ளம், கரையினில் நெருப்பு, இடையே இறைவனின் சிரிப்பு இதுதான் என் நிலை என ஓபிஎஸ் கருத்து. 
 
மத்திய அரசு கடந்த ஆண்டு வேளான் சட்ட திருத்த மசோதாக்களைக் கொண்டு வந்தது. இது விவசாயிகளுக்கு எதிராகவும், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதராவாகவும் இருப்பதாகவும் விவசாயிகள் மற்றும் எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். டெல்லியில் பஞ்சாப் விவசாயிகள் 6 மாதங்களுக்கு மேலாக போராட்டம் நடந்துவந்தாலும் இன்னமும் தீர்வு காணப்படவில்லை.
 
இந்நிலையில் இன்று சட்டசபையில் வேளாண் மசோதாக்களுக்கு எதிராக தமிழக அரசு தீர்மானம் கொண்டு வந்தது. இந்த தீர்மானத்தின் போது அதிமுக மற்றும் பாஜக கட்சியைச் சேர்ந்தவர்கள் வெளிநடப்பு செய்தனர்.  இதனிடையே துரைமுருகன் ஓபிஎஸ் குறித்து பேசியது அவருக்கு மனகசப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
இதனை தமிழ்நாடு சட்டப்பேரவையில் தனது நிலையை கண்ணதாசன் பாடல்வரிகளைக் கொண்டு எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் விளக்கினார். ஆம், தம்முடைய தனிப்பட்ட நிலையை எண்ணும்போது ஒரு பாடல் வரி நினைவுக்கு வருவதாகவும், அது. நதியினில் வெள்ளம், கரையினில் நெருப்பு, இடையே இறைவனின் சிரிப்பு இதுதான் என் நிலை என்றார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

10ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவிக்கு திடீரென பிறந்த குழந்தை.. குப்பை தொட்டியில் வீசியதால் பரபரப்பு..!

ஈரான் போரால் 1000 டன் இந்திய கன்டெய்னர்கள் முடக்கம்.. அழுகும் நிலையில் வேளாண் பொருட்கள்..!

ஈரான் எதிராக களமிறங்கும் இன்னொரு நாடு.. தூதர்களை திரும்ப பெற்றதால் பரபரப்பு..!

அமெரிக்கா ஏன் அனுமதி கொடுக்கணும்!.. மோடியை விளாசிய ஸ்டாலின்..

விஜய் ஒரு Sorry சொன்னா போதும்!. எல்லாம் முடிந்துவிடும்!.. சீமான் பேட்டி!..

அடுத்த கட்டுரையில்
Show comments