திடீரென குஜராத் செல்லும் ஓபிஎஸ்... என்ன காரணம்?

Webdunia
ஞாயிறு, 22 ஜனவரி 2023 (10:57 IST)
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் திடீரென குஜராத் மாநிலத்திற்கு சென்று இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
தமிழகத்தில் நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வேட்பாளரை நிறுத்த போவதாக நேற்று ஓ பன்னீர் செல்வம் தெரிவித்து இருந்தார். அதுமட்டுமின்றி நேற்று அவர் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்பட ஒரு சில அரசியல்வாதிகளையும் சந்தித்தார். 
 
இந்த நிலையில் இன்று அவர் திடீர் என குஜராத் மாநிலம் அகமதாபாத்துக்கு சென்றுள்ளார். அங்கு தமிழர்கள் வசிக்கும் பகுதியில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற உள்ளதை அடுத்து அந்த பொங்கல் விழாவில் கலந்து கொள்வதற்காக அவர் அகமதாபாத் சென்றதாக கூறப்படுகிறது. 
 
இந்த நிலையில் குஜராத்தில் உள்ள முக்கிய பிரபலங்களை அவர் சந்திக்க இருப்பதாகவும் முக்கிய ஆலோசனை செய்ய இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. ஓபிஎஸ் அவர்களுடன் மனோஜ் பாண்டியன் உள்ளிட்ட மூன்று பேர் குஜராத் செய்திருப்பதாக தெரிகிறது.
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐ.ஏ.எஸ். அதிகாரி என கூறி நட்சத்திர ஹோட்டலில் 6 மாதங்கள் தங்கிய பெண் கைது.. பாகிஸ்தானில் இருந்து பெரிய தொகை வந்ததா?

திருமணமான தாய்மாமா மகளை உறவுக்கு அழைத்த இளைஞர்.. சம்மதிக்காததால் துப்பாக்கியால் சுட்டு கொலை..!

கோவாவில் 77 அடி உயர ராமரின் வெண்கல சிலை.. பிரதமர் மோடி திறக்கிறார்..!

செங்கோட்டையன் இணைவு!.. தவெகவுக்கு என்ன லாபம்?.. அதிமுகவுக்கு என்ன நஷ்டம்?...

தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் வேறு வேறு அல்ல, இரண்டும் ஒன்றுதான்.. தவெகவில் இணைந்த செங்கோட்டையன் பேட்டி..!

அடுத்த கட்டுரையில்
Show comments