Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திடீரென குஜராத் செல்லும் ஓபிஎஸ்... என்ன காரணம்?

Webdunia
ஞாயிறு, 22 ஜனவரி 2023 (10:57 IST)
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் திடீரென குஜராத் மாநிலத்திற்கு சென்று இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
தமிழகத்தில் நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வேட்பாளரை நிறுத்த போவதாக நேற்று ஓ பன்னீர் செல்வம் தெரிவித்து இருந்தார். அதுமட்டுமின்றி நேற்று அவர் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்பட ஒரு சில அரசியல்வாதிகளையும் சந்தித்தார். 
 
இந்த நிலையில் இன்று அவர் திடீர் என குஜராத் மாநிலம் அகமதாபாத்துக்கு சென்றுள்ளார். அங்கு தமிழர்கள் வசிக்கும் பகுதியில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற உள்ளதை அடுத்து அந்த பொங்கல் விழாவில் கலந்து கொள்வதற்காக அவர் அகமதாபாத் சென்றதாக கூறப்படுகிறது. 
 
இந்த நிலையில் குஜராத்தில் உள்ள முக்கிய பிரபலங்களை அவர் சந்திக்க இருப்பதாகவும் முக்கிய ஆலோசனை செய்ய இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. ஓபிஎஸ் அவர்களுடன் மனோஜ் பாண்டியன் உள்ளிட்ட மூன்று பேர் குஜராத் செய்திருப்பதாக தெரிகிறது.
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா-சீனா கூட்டாளிகள்: அமெரிக்காவின் வரிவிதிப்புக்கு மத்தியில் சீனாவின் அதிரடி அறிவிப்பு

ஜம்மு-காஷ்மீரில் திடீர் வெள்ளம்: குழந்தையைத் தோளில் சுமந்து சென்று உதவிய போலீஸ் அதிகாரி

ஹைதராபாத்தில் மதமாற்ற புகார்: முன்னாள் கணவர் மீது 'லவ் ஜிஹாத்' குற்றச்சாட்டு

விவசாயிகளின் நலன்களுக்கு எதிராக எந்த ஒப்பந்தங்களும் கையெழுத்தாகாது: மத்திய அமைச்சர் திட்டவட்டம்

ஆந்திராவில் மகளிருக்கு இலவச பேருந்து: முதல்வர் சந்திரபாபு நாயுடு தொடங்கி வைத்தார்..!

அடுத்த கட்டுரையில்
Show comments