Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிமுக கொடி, சின்னம் பயன்படுத்த தடை: மேல்முறையீடு செய்ய ஓபிஎஸ் முடிவு..!

Mahendran
திங்கள், 18 மார்ச் 2024 (19:09 IST)
அதிமுக கொடி மற்றும் சின்னத்தை ஓபிஎஸ் அணி பயன்படுத்தக்கூடாது என்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் மேல்முறையீடு செய்யப் போவதாக ஓபிஎஸ் தரபினர் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 
 
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓ பன்னீர் செல்வம் மற்றும் அவரது அணியினர் அதிமுக சின்னம் ,கொடி, லெட்டர் பேட் ஆகியவற்றை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வழக்கு தொடுத்து இருந்தார் 
 
இந்த வழக்கு கடந்த சில மாதங்களாக சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்த நிலையில் அதிரடியாக தீர்ப்பு வெளியானது. இந்த தீர்ப்பில் அதிமுக சின்னம், கொடி, லெட்டர் பேடு ஆகியவற்றை பயன்படுத்த ஓ பன்னீர் செல்வம் மற்றும் அவரது தரப்பிற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
 
இதனை அடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் ஓபிஎஸ் தரப்பு மேல்முறையீடு செய்யப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் மேல்முறையீட்டில் வழக்கின் தீர்ப்பு தேர்தலுக்கு முன் வருமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீட் தேர்வுக்காக அனைத்து கட்சி கூட்டம்: வெற்று விளம்பர மாடல் தி.மு.க அரசின் கபட நாடகம்: விஜய்

மெஸ்ஸியை பிச்சைக்காரனாக மாற்றிய ஏஐ வீடியோ.. ரசிகர்கள் கண்டனம்.!

கட்சி பணிகளுக்கு உதவாதவர்கள் ஓய்வு எடுங்கள்: காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு கார்கே எச்சரிக்கை..!

ரஷ்யாவுக்கு வாருங்கள்.. வெற்றி விழாவை கொண்டாடுவோம்: மோடிக்கு புதின் அழைப்பு..!

இன்று ஒரே நாளில் 2வது முறை அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை: பொதுமக்கள் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments