Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரெய்டு நடத்தியது சரிதான்.. திமுகவுக்கு சப்போர்ட்? – ஓபிஎஸ் மீது கட்சியினர் அதிருப்தி!

Webdunia
ஞாயிறு, 18 செப்டம்பர் 2022 (10:59 IST)
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வீட்டில் நடந்த ரெய்டு குறித்து ஓபிஎஸ் தெரிவித்துள்ள கருத்து கட்சியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிகிறது.

அதிமுக ஒற்றை தலைமை தொடர்பாக எடப்பாடி பழனிசாமி – ஓ பன்னீர்செல்வம் இடையே மோதல் தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவாளர்கள் குறித்து ஓ.பன்னீர்செல்வமும், ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் குறித்து ஈபிஎஸ்-ம் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர்.

இந்நிலையில் ஈபிஎஸ் ஆதரவாளர்களான அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோர் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை மேற்கொண்டது.

ALSO READ: கஞ்சா சாக்லேட்.. கஞ்சா கேக்! சென்னையில் கொடிகட்டும் விற்பனை! – போலீஸார் அதிர்ச்சி!

இதுகுறித்து கருத்து தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம் “அரசு தன் கடமையை செய்கிறது. முன்னாள் அமைச்சர்கள் தாங்கள் குற்றமற்றவர்கள் என்பதை நிரூபிக்க வேண்டும்” என கூறியுள்ளார்.

என்ன இருந்தாலும் அதிமுகவினரை பிறரிடத்தில் விட்டுத்தர கூடாது என இந்த கருத்தால் பிற அதிமுகவினர் முகம் சுளித்துள்ளார்களாம். இதை காரணமாக கொண்டு ஓபிஎஸ் ஆதரவாளர்களை தங்கள் பக்கம் இழுக்க எடப்பாடியார் ஆதரவாளர்கள் முயன்று வருவதாகவும் அரசியல் வட்டாரத்தில் பேசிக் கொள்ளப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments