Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

22ஆம் தேதிக்கு பின்னர் பன்னீர்செல்வம் பேசமாட்டார். டிடிவி தினகரன்

22ஆம் தேதிக்கு பின்னர் பன்னீர்செல்வம் பேசமாட்டார். டிடிவி தினகரன்
, திங்கள், 20 மார்ச் 2017 (06:27 IST)
ஆர்.கே.நகர் தொகுதியில் அதிமுக சசிகலா அணியின் சார்பாக போட்டியிடும் டிடிவி தினகரன் தலைமையில் நேற்று அதிமுக தலைமை அலுவலகத்தில் இடைதேர்தல் குறித்து ஆலோசனை நடைபெற்றது., இந்த ஆலோசனை கூட்டத்தில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பிரசார பணிகளை ஒருங்கிணைக்க 2 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.



இந்த குழுக்களில் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, செல்லூர் ராஜூ, ஆர்.பி. உதயகுமார் மற்றும் பா. வளர்மதி உள்ளிட்டோர் குழுவில் இடம்பெற்றுள்ளனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன் கூறியதாவது:

ஆர்.கே.நகர் தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் தான் போட்டியிடுவேன். 100 சதவீதம் இரட்டை இலை சின்னம் எங்களுக்குத்தான் கிடைக்கும். இரட்டை இலை சின்னம் குறித்து  பன்னீர்செல்வம் 22-ம் தேதி வரைதான் பேசுவார். அதன்பின்னர் பேசமாட்டார். மேலும் ஆர்.கே.நகரில் போட்டியிடுவதில் எனக்கு எந்த சட்ட சிக்கலும் இல்லை' என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கட்டமைப்பு விஷயத்தில் அதிமுகவிட பாஜக, காங்கிரஸ் குறைவுதான். ப.சிதம்பரம்