Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குழந்தை என்று பிறந்ததோ அதுதான் பிறந்தநாள்! – தமிழக நாள் விவகாரத்தில் ஓபிஎஸ் கருத்து!

Webdunia
ஞாயிறு, 31 அக்டோபர் 2021 (14:07 IST)
தமிழ்நாடு நாள் எந்த தேதியில் கொண்டாடுவது என்பது குறித்த சர்ச்சை எழுந்துள்ள நிலையில் ஓ.பன்னீர்செல்வம் கருத்து தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு தனி மாநிலமாக பிரிக்கப்பட்ட நாளை தமிழ்நாடு நாளாக கொண்டாட திட்டமிடப்பட்டு வரும் நிலையில் அது குறித்து குழப்பங்கள் ஏற்பட்டுள்ளது. முந்தைய தமிழக முதல்வர் அண்ணாதுரை தமிழகத்திற்கு தமிழ்நாடு என பெயர் சூட்டிய ஜூலை 18ம் தேதியை தமிழக நாளாக கொண்டாட திட்டமிடப்பட்டுள்ள நிலையில், நில அமைப்பியல் ரீதியாக பிரிக்கப்பட்ட நவம்பர் 1 ஐ தமிழ்நாடு நாளாக கொண்டாட வேண்டும் என எதிர்கட்சிகள் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ள எதிர்கட்சி துணை தலைவர் ஓ.பன்னீர் செல்வம் “ஜூலை 18ம் தேதி தமிழ்நாடு நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது அரசியல் காழ்புணர்ச்சியின் உச்சம். பத்து வருடங்கள் கழித்து குழந்தையின் பெயர் மாற்றப்பட்டாலும், குழந்தை என்று பிறந்ததோ அன்றுதான் பிறந்தநாள் கொண்டாட வேண்டுமே தவிர பெயர் வைத்த நாளை அல்ல” எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருமலை திருப்பதி கோவிலில் இந்துக்களுக்கு மட்டுமே வேலை: சந்திரபாபு நாயுடு அறிவிப்பு..!

ஸ்டாலின் கூட்டும் தொகுதி மறுசீரமைப்பு கூட்டு நடவடிக்கை குழு..மம்தா பானர்ஜி புறக்கணிப்பு..!

சென்னையில் இன்று பள்ளிகள் செயல்படும்: மாவட்ட கல்வி அலுவலர் அறிவிப்பு.!

திருமணத்திற்கு என்னை ஏன் அழைக்கவில்லை.. துப்பாக்கியால் சுட்ட பக்கத்து வீட்டுக்காரர்..!

மறுமணம் செய்த பெண் ஊழியருக்கு மகப்பேறு விடுப்பு கிடையாதா? ஐகோர்ட் கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments