Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நான் மத்திய அமைச்சராவது இறைவன் கையில்தான் உள்ளது: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்

நான் மத்திய அமைச்சராவது இறைவன் கையில்தான் உள்ளது: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்

Siva

, திங்கள், 3 ஜூன் 2024 (08:13 IST)
நான் மத்திய அமைச்சராவது இறைவன் கையில்தான் உள்ளது என்று முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர் செல்வம் பேட்டி அளித்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் நாளை வெளியாக இருக்கும் நிலையில் ஏற்கனவே வெளியான கருத்துக்கணிப்புகள் பாஜக தான் வெற்றி பெறும் என்றும் மூன்றாவது முறையாக மோடி பிரதமர் ஆவார் என்றும் கூறப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த இராமநாதபுரம் பாஜக கூட்டணி கட்சியின் வேட்பாளர் முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வம் ‘இராமநாதபுரத்தில் என்னுடைய வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்றும் நான் பலன்களை எதிர்பார்த்து கட்சி வேலை செய்பவன் அல்ல என்றும் தெரிவித்தார்

மேலும் நீங்கள் வெற்றி பெற்றால் மத்திய அமைச்சர் ஆவீர்களா என்று கேட்ட கேள்விக்கு பதில் அளித்த அவர் ’நான் மத்திய அமைச்சராவது இறைவன் கையில்தான் உள்ளது என்றும் தெரிவித்தார்

அரசின் தவறுகளை சுட்டிக்காட்டும் ஒரே இயக்கம் அதிமுக உரிமை மீட்புக் குழு என்று கூறிய ஓபிஎஸ், மூன்றாவது முறையாக மோடி பிரதமர் ஆவார் என்றும் கூறினார்.

Edited by Siva
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

புளூடூத் ஹெட்போன் வெடித்து காது சேதம்.. சிவகங்கை இளைஞர் மருத்துவமனையில் அனுமதி..!