Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எதைக் கொண்டு வந்தோம் இழப்பதற்கு! ஓபிஎஸ் தத்துவ பதில்

Webdunia
வியாழன், 15 பிப்ரவரி 2018 (11:06 IST)
முன்னாள் முதல்வரும் இந்நாள் துணை முதல்வருமான ஓபிஎஸ் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் 'நீங்கள் முதல்வர் பதவியை இழந்து ஒரு வருடம் ஆகிறது; முதல்வர் பதவியை இழந்ததற்காக வருத்தப்படுகிறீர்களா? என்று செய்தியாளர்கள் கேள்வி கேட்டனர். இதற்கு பதில் கூறிய ஓபிஎஸ், 'இது நல்ல கேள்வி... எதைக் கொண்டு வந்தோம் இழப்பதற்கு? என்று தத்துவத்மான பதிலை கூறி செய்தியாளர்களை ஆச்சரியப்படுத்தினார்.

மேலும் இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் சட்டம் ஒழுங்கு சீராக இருப்பதாகவும், தமிழகம் அமைதிப்பூங்காவாக திகழ்வதாகவும் மற்றொரு கேள்விக்கு பதிலளித்தார்.

மேலும் அம்மா உணவகம் நஷ்டத்தில் இயங்குவது குறித்த கேள்விக்கு பதிலளித்த ஓபிஎஸ், 'நீங்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். அம்மா உணவகம் லாபத்திற்காக நடத்தப்படுவது அல்ல. மக்களின் பசிதீர்க்க அம்மாவால் கொண்டு வரப்பட்ட திட்டம். பொதுமக்களின் பசியை தீர்க்க அம்மா உணவகம் தொடர்ந்து இயங்கும்' என்று கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

மோடி குறித்து பெருமையாக பதிவு செய்த ராஷ்மிகா மந்தனா.. பிரதமரின் நெகிழ்ச்சியான ரிப்ளை..!

ஆர்ப்பரித்த அருவி வெள்ளம்.. அடித்து செல்லப்பட்ட சிறுவன்! அலறி ஓடிய சுற்றுலா பயணிகள்! – தென்காசியில் அதிர்ச்சி சம்பவம்!

சென்னையில் செல்ஃபோன் ஆப் மூலமாக போதை மாத்திரை விற்பனை.. ஒரு அட்டை ரூ.2000.!

தவறை உணர்ந்துவிட்டேன்.. பெண் போலீசார் குறித்து பேசியது தவறுதான்: சவுக்கு சங்கர் வாக்குமூலம்..!

கெஜ்ரிவால் ஜாமினில் தான் உள்ளார். ஜூன் 1க்கு பிறகு மீண்டும் சிறை செல்வார்: ராஜ்நாத் சிங்

அடுத்த கட்டுரையில்
Show comments