Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சசிகலா தலைமையில் அதிமுக ஒன்றுசேர வேண்டும்: சுப்பிரமணியம் சுவாமி

சசிகலா தலைமையில் அதிமுக ஒன்றுசேர வேண்டும்: சுப்பிரமணியம் சுவாமி
, வியாழன், 15 பிப்ரவரி 2018 (09:46 IST)
ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் இருந்தே சசிகலா தலைமையிலான அணிக்கே ஆதரவு கொடுத்து வரும் பாஜக பிரமுகர் சுப்பிரமணியம் சுவாமி, தற்போது சசிகலா தலைமையில் அதிமுக ஒன்றுசேர வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளார்.

இன்று செய்தியாளர்களை சந்தித்த சுவாமி, 'திமுக ஒரு தேச விரோத, இந்து விரோத கட்சி என்றும், நாட்டை பிரிப்பதற்காக முயற்சி எடுத்த கட்சி என்றும் கூறியுள்ளார். அதிமுக பிளவுபட்டிருந்தால் திமுக ஆட்சிக்கு வந்துவிடும். எனவே அதிமுக ஒன்றிணைந்து திமுகவை ஆட்சிக்கு வராமல் தடுக்க வேண்டும். ஆனால் அதிமுகவுக்கு தலைமை சசிகலாதான் இருக்க வேண்டும்' என்று கூறியுள்ளார்.

எடப்பாடி பழனிச்சாமியையும், ஓ.பன்னீர்செல்வத்தையும் பதவியில் இருந்து இறக்குவதே தனது முதல் பணி என்று டிடிவி தினகரன் கூறி வரும் நிலையில், சுப்பிரமணியன் சுவாமியின் கருத்து நடைமுறைக்கு சாத்தியமாகுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சாலையோரம் சிறுநீர் கழித்த சுகாதாரத்துறை அமைச்சர்: வைரலாகும் புகைப்படம்