மீண்டும் அழைப்பு விடுத்த பாஜக.. முடியாது என நிராகரித்த ஓபிஎஸ்..!

Mahendran
திங்கள், 11 ஆகஸ்ட் 2025 (11:16 IST)
பாரதிய ஜனதா கட்சியின் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு மீண்டும் வருமாறு முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாகவும், ஆனால் அவர் அந்த அழைப்பை நிராகரித்ததாகவும் கூறப்படுவது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
கடந்த மாதம் பிரதமர் மோடி தமிழகம் வந்தபோது ஓ. பன்னீர்செல்வம் அவமதிக்கப்பட்டதாக கூறப்பட்டதை அடுத்து, அவர் திடீரென தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து விலகுவதாக அறிவித்தார். இந்த முடிவு, அதிமுக-பாஜக கூட்டணிக்கு தென் மாவட்டங்களில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்று கருதப்பட்டது. 
 
இதை தொடர்ந்து, பாஜக நிர்வாகிகள் ஓபிஎஸ்-ஸுடன் பேச்சுவார்த்தை நடத்தியபோதிலும், அவர் மீண்டும் கூட்டணிக்கு வர முடியாது என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
 
தற்போது, அவருக்கு மீண்டும் அழைப்பு விடுக்கப்பட்டதாகவும், ஆனால் "எனது நிர்வாகிகளுடன் கலந்தாலோசித்த பிறகுதான் எதையும் தெரிவிக்க முடியும்" என்று கூறி, பேச்சுவார்த்தைக்கு வர ஓபிஎஸ் மறுத்துவிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது பாஜக நிர்வாகிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
இருப்பினும், பிரதமர் மோடி அவரை நேரடியாக சந்தித்து அழைப்பு விடுத்தால், ஓபிஎஸ் மீண்டும் கூட்டணிக்கு வர வாய்ப்புள்ளது என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தாமாகவே பதவி விலக வேண்டும்.. திருமாவளவன் வலியுறுத்தல்:

ஒரே மேடையில் 2 பெண்களுக்கு தாலி கட்டிய இளைஞர்: இருவருடனும் 10 வருடங்கள் வாழ்ந்து குழந்தை பெற்ற பின் திருமணம்..!

நிர்மலா சீதாராமன் 'டீப்ஃபேக்' வீடியோ: பெங்களூரு மூதாட்டியிடம் ரூ.33 லட்சம் மோசடி!

யூடியூப் வீடியோ பார்த்து அறுவை சிகிச்சை: உ.பி.யில் பெண் பலி.. போலி மருத்துவர் மீது வழக்கு

பாலியல் வன்கொடுமைக்கு பின் அந்தரங்க உறுப்பில் இரும்புக்கம்பி.. 7 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments