மதுரை சாலையில் இருந்த டீக்கடையில் டீ அருந்திய துணை முதல்வர்!

Webdunia
வியாழன், 5 நவம்பர் 2020 (18:46 IST)
மதுரை சாலையில் இருந்த டீக்கடையில் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் அவர்கள் தனது கட்சியினருடன் டீ அருந்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது 
 
மதுரை விமான நிலைய சாலையில் வாகனத்தை நிறுத்திவிட்டு துணை முதல்வர் பன்னீர்செல்வம் அங்கிருந்த தேநீர் கடையில் தேநீர் அருந்தியது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது
 
முத்துராமலிங்க தேவரின் தங்க கவச உடையை ஒப்படைக்க துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் அவர்கள் மதுரை வந்தார். இந்த நிலையில் மதுரை விமான நிலையம் சாலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென அவர் காரை நிறுத்தச் சொன்னார் 
 
இதனை அடுத்து காரிலிருந்து கீழே இறங்கிய துணை முதல்வர் அங்கிருந்த டீக்கடையில் உட்கார்ந்து டீ அருந்தினார். அவரை அடுத்து அவருடன் வந்த அனைவரும் டீ அருந்தினர். அதன்பின்னர் டீக்கடைக்காரரை பாராட்டிய துணைமுதல்வர் அனைத்துக்கும் அவரே பணம் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது துணை முதல்வர் டீக்கடையில் டீ சாப்பிட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தம்பி விஜய் எனக்கு எதிரி இல்லை!... திடீர் டிவிஸ்ட் கொடுத்த சீமான்...

கிரீன்லாந்தை கைப்பற்ற நினைத்தால் விபரீதம் ஏற்படும்.. ட்ரம்ப்க்கு டென்மார்க் எச்சரிக்கை...

ஜனவரியில் நல்ல மழை பெய்யும்.. தமிழ்நாடு வெதர்மேன் தகவல்..!

திமுக கூட்டணிக்கு செல்கிறதா தேமுதிக? இரட்டை இலக்கங்களில் தொகுதிகள்?

மோடியால் பாஜகவுக்கு ஆபத்து.. பகீர் கிளப்பிய சுப்பிரமணியன் சுவாமி!

அடுத்த கட்டுரையில்
Show comments