Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தைரியம் இருந்தா தனிக்கட்சி தொடங்குங்க..! – ஈபிஎஸ்க்கு ஓபிஎஸ் சவால்!

Webdunia
புதன், 21 டிசம்பர் 2022 (14:49 IST)
இன்று அதிமுக தொடர்பாக ஓபிஎஸ் அணியினர் சந்திப்பு கூட்டம் நடத்திய நிலையில் அதில் ஓபிஎஸ் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுகவில் ஓபிஎஸ் – ஈபிஎஸ் இடையே கட்சி தொடர்பான கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில் கட்சியினர் இரண்டு அணிகளாக பிரிந்து செயல்பட்டு வருகின்றனர். அதிமுகவின் இடைக்கால பொதுசெயலாளராக எடப்பாடி பழனிசாமி கட்சி பொதுக்குழு கூட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், அதை எதிர்த்து ஓபிஎஸ் வழக்கு தொடர்ந்தார்.

இப்படியாக இரு தரப்புக்கும் இடையே மோதல் நிலவி வரும் நிலையில் இன்று ஓபிஎஸ் மற்றும் ஆதரவாளர்களின் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. அதில் பேசிய ஓ.பன்னீர்செல்வம் “கூவத்தூரில் தொடங்கி பொதுக்குழு உறுப்பினர்கள் வரை அனைவரையும் எடப்பாடி பழனிசாமி கைக்குள் வைத்திருப்பதற்கு பணம்தான் காரணம். யார் இந்த எடப்பாடி பழனிசாமி. அவருக்கு என்ன வரலாறு தெரியும்.

50 ஆண்டுகளாக பலரும் ரத்த சிந்தி வளர்த்த இயக்கத்தை கபளீகரம் செய்ய நினைத்தால் அது முடியாது. எடப்பாடி பழனிசாமிக்கு தைரியம் இருந்தால் தனிக்கட்சி நடத்துவேன் என்று சொல்வாரா?” என பேசியுள்ளார்.

Edit By Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய பலி 55ஆக உயர்வு.. இன்னும் அதிகரிக்கும் என அச்சம்..!

நீட் தேர்வில் முறைகேடு செய்தால் ரூ1 கோடி அபராதம், 10 ஆண்டு ஜெயில்: புதிய சட்டம் அமல்..!

நீட் தேர்வு எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் திடீர் ஒத்திவைப்பு .. திமுக மாணவர் அணி அறிவிப்பு..!

ஹஜ் புனித பயணம் சென்ற 98 இந்தியர்கள் பலி..! மத்திய அரசு தகவல்..!!

டாஸ்மாக் வருமானம் அதிகரிப்பு..! கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு ரூ. 1, 734 கோடி உயர்வு..!

அடுத்த கட்டுரையில்
Show comments