சசிகலாவின் அரசியல் வாழ்க்கையை முடிவுக்கு கொண்டுவர ஓபிஎஸ்-இன் அடுத்த திட்டம்!
சசிகலாவின் அரசியல் வாழ்க்கையை முடிவுக்கு கொண்டுவர ஓபிஎஸ்-இன் அடுத்த திட்டம்!
தமிழக முதல்வராக சசிகலா அணியை சேர்ந்த எடப்பாடி பழனிச்சாமி முதல்வரானதை அடுத்து நீதி கேட்டு மக்களை சந்திக்க உள்ளார் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். இதற்கான வாகனமும் தயாராகி அவரது வீட்டின் முன் உள்ளது.
ஜெயலலிதா இறந்ததை அடுத்து அதிமுகவில் சசிகலா அணி, ஓபிஎஸ் அணி என இரண்டு அணிகள் உருவாகி கட்சி உடைந்துள்ளது. சசிகலாவுக்கும் ஓபிஎஸுக்கும் நேரடி போட்டி நிலவியது. இதனிடையே சசிகலா சிறைக்கு செல்லவும், அவர் தனது விசுவாசியாக எடப்பாடி பழனிச்சாமியை நியமித்துவிட்டு சென்றார்.
இதனையடுத்து கடந்த சனிக்கிழமை நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிச்சாமி 122 வாக்குகளை பெற்று முதல்வர் ஆனார். ஓபிஎஸ் தரப்பு 11 எம்எல்ஏக்களை மட்டுமே வைத்துள்ளனர். இதனால் எடப்பாடி பழனிச்சாமி முதல்வரானார்.
ஜெயலலிதாவுக்கு சசிகலா துரோகம் செய்தது குறித்து தமிழக மக்களுக்கு தெரியப்படுத்த மாநிலம் முழுவதும் பிரச்சாரம் செய்ய இருப்பதாக ஓபிஎஸ் தரப்பு ஏற்கனவே அறிவித்திருந்தது. இதனையடுத்து இதனை தற்போது கையிலெடுத்து தமிழகம் முழுவதும் சூறாவளி பிரச்சாரம் செய்ய உள்ளார் ஓபிஎஸ்.
தற்போது இந்த பிரச்சாரத்துக்கான பிரத்யேக வாகனம் ஓபிஎஸ் வீட்டின் முன் நிற்க வைக்கப்பட்டுள்ளது. இந்த பிரச்சாரத்தின் மூலம் சசிகலாவின் அரசியல் பிரவேசத்தை முடிவுக்கு கொண்டு வர அவர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வருகின்றன.