கடந்த வியாழன் அன்று மும்பையில் இருந்து லண்டன் சென்ற போயிங்-777 என்ற விமானம் திடீரென கட்டுபாட்டு அறையிடல் இருந்து விலகியது. இதனால் இந்த விமானம் ஜெர்மனி எல்லையில் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டது
உடனடியாக இந்த தகவல் ஜெர்மனியின் விமானப்படைக்கு அனுப்பப்பட்டது. ஜெர்மனி விமானப்படையின் தேடுதல் வேட்டையில் எந்தவித பாதிப்பும் இன்றி இந்திய விமானம் கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல்கள் வந்துள்ளது.
தற்போது கண்டுபிடிக்கப்பட்ட போயிங் 777 விமானத்தில் பயணம் செய்த பயணிகள் லண்டன் நகருக்கு அதே விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ஜெர்மனி விமானப்படை அறிவித்துள்ளது.