Publish Date: Tue, 26 Jul 2022 (17:37 IST)
Updated Date: Tue, 26 Jul 2022 (17:40 IST)
அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்ட எடப்பாடி பழனிச்சாமி இடம் அதிமுக முழுமையாக சென்று விட்ட நிலையில் அதிமுக விலிருந்து நீக்கப்பட்ட ஓபிஎஸ் தனியாக ஒரு அதிமுகவை நடத்தி வருகிறார்
அவர் அதிமுக நிர்வாகிகளை அவ்வப்போது அறிவித்து வரும் நிலையில் தற்போது மேலும் சில நிர்வாகிகளை அறிவித்துள்ளார். அதன்படி திருச்சி மாவட்ட கழக செயலாளராக வெல்லமண்டி நடராஜன், பெரம்பலூர் மாவட்ட கழக செயலாளர் ராமச்சந்திரன், கழக வழக்கறிஞர் பிரிவு தலைவராக திருமாறன் மற்றும் கழக வழக்கறிஞர் பிரிவுச் செயலாளராக பாபு ஆகியோரை நியமனம் செய்துள்ளார்
ஏற்கனவே துணை ஒருங்கிணைப்பாளர் உள்பட பல பதவிகளுக்கு சிலரை ஓபிஎஸ் நியமனம் செய்துள்ள நிலையில் தற்போது மேலும் நான்கு பேர்களை நியமனம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது